ETV Bharat / city

அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு!

author img

By

Published : Sep 8, 2019, 2:59 PM IST

சென்னை: அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவிற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன் அழைப்பிதழை வழங்கினார்.

செங்குட்டுவன்

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வழங்கினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தலின்படி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளோம். இந்த மாநாடு மிகவும் முக்கியமான நேரத்தில் நடக்க உள்ளது. பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்தபின் தென்னிந்தியாவில் நடக்கும் முதல் மாநாடு ஆகும்" எனத் தெரிவித்தார்.

மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன் பேட்டி

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வழங்கினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தலின்படி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளோம். இந்த மாநாடு மிகவும் முக்கியமான நேரத்தில் நடக்க உள்ளது. பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்தபின் தென்னிந்தியாவில் நடக்கும் முதல் மாநாடு ஆகும்" எனத் தெரிவித்தார்.

மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் செங்குட்டுவன் பேட்டி
Intro:Body:மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் செங்குட்டுவன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அண்ணா பிறந்தநாள் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

சென்னை ஒய்.எம்.சியே மைதானத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைப்பெற உள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் செங்குட்டுவன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தல் படி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி உள்ளோம். இந்த மாநாடு மிகவும் தேவையான நேரத்தில் நடக்க உள்ளது. பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பின் தென் இந்தியாவில் நடக்கும் முதல் மாநாடு ஆகும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.