ETV Bharat / city

கணவன், மனைவி இருவரும் ஈகோவை காலணியாக கருத வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறை!

author img

By

Published : Jun 1, 2021, 4:15 PM IST

சென்னை: குழந்தைகளின் எதிகாலம் கருதி கணவன் மனைவி இருவரும் சகிப்பின்மை, ஈகோவை காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

சேலம் மாவட்டத்தில், கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிக்குமார். இவர் மீது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவர் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே , வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிக்குமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக்கோரி, சசிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ' தன்னை துன்புறுத்தியதாகவும், கைவிட்டுச் சென்று விவாகரத்து பெற்றதாகவும், விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தும், 15 நாள்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், மனைவி தான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல, அது ஒரு சடங்கு என்று தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கணவன் மனைவி இருவரும் ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் வழக்கு ஒத்திவைப்பு

சேலம் மாவட்டத்தில், கால்நடை மருத்துவராக பணியாற்றியவர் சசிக்குமார். இவர் மீது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவர் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே , வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிக்குமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக்கோரி, சசிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ' தன்னை துன்புறுத்தியதாகவும், கைவிட்டுச் சென்று விவாகரத்து பெற்றதாகவும், விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தும், 15 நாள்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், மனைவி தான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல, அது ஒரு சடங்கு என்று தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கணவன் மனைவி இருவரும் ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் வழக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.