ETV Bharat / city

வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தால் நடவடிக்கை - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Feb 11, 2022, 4:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்.22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. முன்னதாக தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுவிடுமுறை அளித்து உத்தரவிட்டது.

இந்த விடுமுறை நாளில் அரசு, தனியார் நிறுவனங்களில் சம்பளம் பிடித்தம் கூடாது என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இன்று(பிப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயக கடமை. இந்த விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பள குறைப்போ இருக்க கூடாது. இதனை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை நேரம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்.22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. முன்னதாக தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுவிடுமுறை அளித்து உத்தரவிட்டது.

இந்த விடுமுறை நாளில் அரசு, தனியார் நிறுவனங்களில் சம்பளம் பிடித்தம் கூடாது என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இன்று(பிப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயக கடமை. இந்த விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பள குறைப்போ இருக்க கூடாது. இதனை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை நேரம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.