ETV Bharat / city

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

author img

By

Published : Jun 22, 2022, 11:48 AM IST

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர் கைது
இளைஞர் கைது

சென்னை: பெரியமேடு வீராசாமி தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் நேற்று முன்தினம் (ஜூன்20) இரவு 10 மணியளவில் அடையாளம் நபர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தின் அலாரம் அடித்ததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கண்டுபிடித்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்

பின்னர் உடனே அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்த காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரை சேர்ந்த கேதார் பாலே(33) என்பது தெரியவந்தது.

அவர் வேறு எங்கேனும் இதுபோன்ற கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும், கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து மதிப்பு ரூ. 30,000 கோடி... யோகா சாம்ராஜ்யத்தின் தலைவன் உருவான கதை...

சென்னை: பெரியமேடு வீராசாமி தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் நேற்று முன்தினம் (ஜூன்20) இரவு 10 மணியளவில் அடையாளம் நபர் ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தின் அலாரம் அடித்ததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கண்டுபிடித்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்

பின்னர் உடனே அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்த காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரை சேர்ந்த கேதார் பாலே(33) என்பது தெரியவந்தது.

அவர் வேறு எங்கேனும் இதுபோன்ற கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும், கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து மதிப்பு ரூ. 30,000 கோடி... யோகா சாம்ராஜ்யத்தின் தலைவன் உருவான கதை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.