ETV Bharat / city

தொடா் மழையால் 9 விமானங்கள் தாமதம்!

author img

By

Published : Jan 5, 2021, 4:42 PM IST

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்கள் காலதாமதாகப் புறப்பட்டு சென்றன.

flight
flight

சென்னை, புறநகா் பகுதிகளில் நேற்று (ஜன. 04) இரவிலிருந்து தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜ் மூலமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் ஏரோபிரிட்ஜ் இல்லாமல் பயணிகளை பிக்கப்பஸ்களில் ஏற்றிச் சென்று விமானங்களில் ஏற்றி அனுப்பக்கூடிய விமானங்கள் மட்டும் புறப்பட்டுச் செல்கின்றன.

அதற்கு காரணம், தொடா்மழை காரணமாக பயணிகள் பிக்கப் பஸ்களில் ஏறுவதும், லேடர்கள் வழியாக விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன. 05) பகல் 3 மணி வரை தூத்துக்குடி, புனே, அகமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹீப்லி ஆகிய 6 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அதைப்போல் சா்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் லக்கேஜ்கள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் துபாய், சாா்ஜா, இலங்கை நாடுகளுக்குச் செல்லும் மூன்று சிறப்பு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச முனையங்களில் குறித்த நேரத்திற்கு வந்து தரையிறங்கின.

சென்னை, புறநகா் பகுதிகளில் நேற்று (ஜன. 04) இரவிலிருந்து தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜ் மூலமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் ஏரோபிரிட்ஜ் இல்லாமல் பயணிகளை பிக்கப்பஸ்களில் ஏற்றிச் சென்று விமானங்களில் ஏற்றி அனுப்பக்கூடிய விமானங்கள் மட்டும் புறப்பட்டுச் செல்கின்றன.

அதற்கு காரணம், தொடா்மழை காரணமாக பயணிகள் பிக்கப் பஸ்களில் ஏறுவதும், லேடர்கள் வழியாக விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன. 05) பகல் 3 மணி வரை தூத்துக்குடி, புனே, அகமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹீப்லி ஆகிய 6 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அதைப்போல் சா்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் லக்கேஜ்கள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் துபாய், சாா்ஜா, இலங்கை நாடுகளுக்குச் செல்லும் மூன்று சிறப்பு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச முனையங்களில் குறித்த நேரத்திற்கு வந்து தரையிறங்கின.

இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு: மீண்டும் ஒரு கன்னட நடிகை கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.