ETV Bharat / city

மாநகரில் கரோனாவை எதிர்கொள்ள வீதியுலா வரும் மஞ்சள், வேப்பிலை கரைசல்! - natural antiseptic sprayers started in ambathur chennai

சென்னை: கொரட்டூர் பகுதியில் மஞ்சள், வேப்பிலை கலந்த கிருமி நாசினி நீர் தெளிப்புப் பணியை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் தொடங்கிவைத்தார்.

natural antiseptic sprayers started in ambathur chennai
natural antiseptic sprayers started in ambathur chennai
author img

By

Published : Apr 2, 2020, 11:50 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க் கிருமி இந்தியாவிலும் தீவிரமடைந்துவருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இச்சூழலில் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் வேப்பிலை, மஞ்சள் கலந்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.

இதனை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது இப்பணியில் காவல் துறையினருடன் அதிமுகவினரும் ஈடுபட்டனர். இதையடுத்து அம்பத்தூர் மண்டலம் ஏழுக்கு உள்பட்ட 83ஆவது வார்டு கொரட்டுர் அக்ரஹாரம் பகுதியில் சுமார் 50 கிலோ வேப்பிலை, 50 கிலோ மஞ்சள் ஆகியவை கொண்டு 26,000 லிட்டர் கிருமி நாசினி சுற்றுவட்டாரத்தில் தெளிக்கப்பட்டது.

வேப்பிலை மஞ்சள் கரைசல்

மேலும் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபடும் பாடி மேம்பாலத்தின் மேல் கொரட்டூர், வில்லிவாக்கம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்துவரும் வாகனங்களை சோதனை செய்யும் இடத்திலும் இந்த மஞ்சள் வேப்பிலை நீர் தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் உயிரிழப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க் கிருமி இந்தியாவிலும் தீவிரமடைந்துவருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இச்சூழலில் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் வேப்பிலை, மஞ்சள் கலந்த கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.

இதனை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது இப்பணியில் காவல் துறையினருடன் அதிமுகவினரும் ஈடுபட்டனர். இதையடுத்து அம்பத்தூர் மண்டலம் ஏழுக்கு உள்பட்ட 83ஆவது வார்டு கொரட்டுர் அக்ரஹாரம் பகுதியில் சுமார் 50 கிலோ வேப்பிலை, 50 கிலோ மஞ்சள் ஆகியவை கொண்டு 26,000 லிட்டர் கிருமி நாசினி சுற்றுவட்டாரத்தில் தெளிக்கப்பட்டது.

வேப்பிலை மஞ்சள் கரைசல்

மேலும் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபடும் பாடி மேம்பாலத்தின் மேல் கொரட்டூர், வில்லிவாக்கம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்துவரும் வாகனங்களை சோதனை செய்யும் இடத்திலும் இந்த மஞ்சள் வேப்பிலை நீர் தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.