மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் வியாழன் அன்று (பிப். 11) சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கட்சி நிர்வாகிகளிடம் இடையே பேசிய கமல், "நேர்மையாக இருக்க முடியும் நேர்மையாக அரசியல் செய்து வெற்றி பெறமுடியும் என்பவர்கள் மட்டும் என்னுடன் இருங்கள் அதில் சற்று அவநம்பிக்கை இருந்தாலும் கதவு திறந்து இருக்கிறது நீங்கள் செல்லலாம். களப்போட்டியில் இருப்பவர் ஸ்டாலின். ஓபிஎஸ், ஈபிஎஸ் அபூர்வ சகோதரர்கள். அப்புறம் கமல் ஹாசன் என்ற உம்மவர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...உணவு தானியங்கள் தயாரிப்பில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு விவசாயிகள் - பிரதமர் மோடி