ETV Bharat / city

'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்

author img

By

Published : Jul 13, 2021, 8:29 PM IST

Updated : Jul 13, 2021, 9:57 PM IST

இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே என முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை: முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டிற்கும், முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இச்சூழலில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது.

அந்தக் குழு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் நீட் தாக்கம் குறித்து கருத்துகளைப் பெற்றுவந்தது. அதன் அடிப்படையில் குழு அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு நாளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரு. நாகராஜன் தரப்பில், மாநில அரசு ஏ.கே. ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என மனுதாரர் கரு. நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாகத் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்துவருகிறோம்.

குழுவுக்கு எதிராக பாஜக ரிட் மனு

கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாகத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதியரசர் தலைமையிலான குழு விசாரணை நடத்திவருகிறது.

அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையில் பாஜக பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல்செய்தார்.

எடப்பாடியின் திரைமறைவு நாடகம்

'நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பாஜக ஏற்கும்' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பாஜகவின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்தப் பொறுப்பாளர் தாக்கல்செய்திருந்தார். ஆட்சியை இழந்த பிறகும் பாஜகவின் பாதம் தாங்கி அடிமைச் சேவகம் செய்யும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார்.

'நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் போடுவதுபோல நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள்' என்று பாஜகவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி ஒரு முறையல்ல; இரண்டு முறை, தமிழ்நாடு சட்டப்பேரவையையே ஏமாற்றிய பழனிசாமிதான், கழக அரசால் அமைக்கப்பட்ட குழுவை நாடகம் என்று கூறினார்.

நெத்தியடித் தீர்ப்பு

நீட் தேர்வுக்கு எதிராக பாஜக மனு தாக்கல்செய்ததை ஒரு வரிகூட கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, மாணவர் நலன் கருதி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறை கூறினார். நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு இருக்க முடியுமா, அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைக்கோத்து, பாஜகவின் முயற்சியை முறியடிக்க உயர் நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா?

பாஜகவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளின் கண்களைக் குத்தும் பாஜகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தள்ளுபடிசெய்துள்ளது.

'நீட் தேர்வு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே தமிழ்நாடு அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்' என்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீட் தாக்கம் - ஆய்வு செய்வதற்கே குழு

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை எனக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்” என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பியதோடு; விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்கள்.

ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் நிலைமை தெரியவரும் என்றும், ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் வெற்றியே முழு வெற்றி

குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.

மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

நீட் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி

நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன்மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது.

தமிழ்நாடு அரசு, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே.

ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முழுக்க முழுக்க அரசியல் நாடகம்' - நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் குழுவை விமர்சித்த கரு. நாகராஜன்

சென்னை: முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டிற்கும், முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இச்சூழலில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது.

அந்தக் குழு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் நீட் தாக்கம் குறித்து கருத்துகளைப் பெற்றுவந்தது. அதன் அடிப்படையில் குழு அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு நாளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரு. நாகராஜன் தரப்பில், மாநில அரசு ஏ.கே. ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என மனுதாரர் கரு. நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாகத் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்துவருகிறோம்.

குழுவுக்கு எதிராக பாஜக ரிட் மனு

கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து கருத்துகள் குவிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாகத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதியரசர் தலைமையிலான குழு விசாரணை நடத்திவருகிறது.

அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையில் பாஜக பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல்செய்தார்.

எடப்பாடியின் திரைமறைவு நாடகம்

'நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பாஜக ஏற்கும்' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பாஜகவின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்தப் பொறுப்பாளர் தாக்கல்செய்திருந்தார். ஆட்சியை இழந்த பிறகும் பாஜகவின் பாதம் தாங்கி அடிமைச் சேவகம் செய்யும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார்.

'நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் போடுவதுபோல நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள்' என்று பாஜகவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி ஒரு முறையல்ல; இரண்டு முறை, தமிழ்நாடு சட்டப்பேரவையையே ஏமாற்றிய பழனிசாமிதான், கழக அரசால் அமைக்கப்பட்ட குழுவை நாடகம் என்று கூறினார்.

நெத்தியடித் தீர்ப்பு

நீட் தேர்வுக்கு எதிராக பாஜக மனு தாக்கல்செய்ததை ஒரு வரிகூட கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, மாணவர் நலன் கருதி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறை கூறினார். நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு இருக்க முடியுமா, அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைக்கோத்து, பாஜகவின் முயற்சியை முறியடிக்க உயர் நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா?

பாஜகவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளின் கண்களைக் குத்தும் பாஜகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தள்ளுபடிசெய்துள்ளது.

'நீட் தேர்வு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே தமிழ்நாடு அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்' என்று தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீட் தாக்கம் - ஆய்வு செய்வதற்கே குழு

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை எனக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்” என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பியதோடு; விளம்பரத்திற்காக இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்கள்.

ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் நிலைமை தெரியவரும் என்றும், ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் வெற்றியே முழு வெற்றி

குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளியாகும்.

மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

நீட் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி

நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன்மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது.

தமிழ்நாடு அரசு, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே.

ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முழுக்க முழுக்க அரசியல் நாடகம்' - நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் குழுவை விமர்சித்த கரு. நாகராஜன்

Last Updated : Jul 13, 2021, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.