ETV Bharat / city

உணவுப் பொருள் வழங்கல் துறையின் 12 முக்கிய அறிவிப்புகள் - அமைச்சர் சக்கரபாணி - Minister sakarabani announced the new 12 schemes

உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி சட்டப் பேரவையில் வெளியிட்டார். அதில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக அனுப்புதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

TN assembly
TN assembly
author img

By

Published : Apr 8, 2022, 5:24 PM IST

சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப். 8) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். அவற்றை இங்கு காண்போம்...

  • மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள்/எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000. எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.6,000, மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும்.
  • கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.
  • அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
  • பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) வழங்கப்படும்.
  • உணவு தானியங்கள் சேமிப்பதற்காக நபார்டு நிதி உதவியுடன் 12 வட்ட செயல்முறை கிடங்குகள் 2,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணிணிமயமாக்கப்படும்.
  • ரூ.70.75 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
  • திருவள்ளூர், பொள்ளாச்சி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிர்வு முறையில் 3 சிறப்பு சுற்றுக்காவல் படைகள் உருவாக்கப்படும்
  • குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன சொந்த நிதியிலிருந்து, ரூ.20 லட்சம் செலவில் கணிணிமயமாக்கப்படும்
  • ராணிப்பேட்டை, திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

இதையும் படிங்க : சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடக்கூடாது - சினம் கொண்ட ஈபிஎஸ்

சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப். 8) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், உணவு பொருள் வழங்கல் துறை சார்பில், 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். அவற்றை இங்கு காண்போம்...

  • மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள்/எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000. எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.6,000, மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும்.
  • கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.
  • அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
  • பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) வழங்கப்படும்.
  • உணவு தானியங்கள் சேமிப்பதற்காக நபார்டு நிதி உதவியுடன் 12 வட்ட செயல்முறை கிடங்குகள் 2,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணிணிமயமாக்கப்படும்.
  • ரூ.70.75 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
  • திருவள்ளூர், பொள்ளாச்சி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிர்வு முறையில் 3 சிறப்பு சுற்றுக்காவல் படைகள் உருவாக்கப்படும்
  • குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன சொந்த நிதியிலிருந்து, ரூ.20 லட்சம் செலவில் கணிணிமயமாக்கப்படும்
  • ராணிப்பேட்டை, திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

இதையும் படிங்க : சட்டப்பேரவையில் விவாதிக்க கண்டிஷன் போடக்கூடாது - சினம் கொண்ட ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.