ETV Bharat / city

பாஜக மனுவுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் - உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி தேர்தலில் 95ஆவது வார்டில் பரப்புரை செய்ய அனுமதி மறுத்ததாகக் கூறி, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராஹிம் தாக்கல் செய்த மனுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author img

By

Published : Feb 16, 2022, 1:24 PM IST

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மைச் செயலாளர் சையது இப்ராஹிம் பரப்புரை செய்துவருகிறார்.

அதேபோல, கோவை மாநகராட்சியில் 95ஆவது வார்டில் பரப்புரை மேற்கொள்ள சென்ற தன்னை ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், தன்னை பரப்புரை செய்ய விடாமல் தடுக்ககூடாது எனவும் உத்தரவிடக் கோரி சையது இப்ராஹிம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப். 16) விசாரணைக்கு வந்தபோது, பதட்டமான பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் செல்ல வேண்டாம் என கடிதம் அனுப்பியும், அதை மீறி பரப்புரை செய்ததாக சையது இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விவரங்களை மனுவில் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறி ரூ.10,000 அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அபராதத் தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பிறப்பு குறித்து அவதூறு: அசாம் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மைச் செயலாளர் சையது இப்ராஹிம் பரப்புரை செய்துவருகிறார்.

அதேபோல, கோவை மாநகராட்சியில் 95ஆவது வார்டில் பரப்புரை மேற்கொள்ள சென்ற தன்னை ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், தன்னை பரப்புரை செய்ய விடாமல் தடுக்ககூடாது எனவும் உத்தரவிடக் கோரி சையது இப்ராஹிம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப். 16) விசாரணைக்கு வந்தபோது, பதட்டமான பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் செல்ல வேண்டாம் என கடிதம் அனுப்பியும், அதை மீறி பரப்புரை செய்ததாக சையது இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விவரங்களை மனுவில் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறி ரூ.10,000 அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அபராதத் தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பிறப்பு குறித்து அவதூறு: அசாம் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.