ETV Bharat / city

கார்த்தி சிதம்பரம் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Jun 6, 2020, 3:57 PM IST

சென்னை: வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chithambaram
chithambaram

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மட்டுமே வருமான வரித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறி இருவர் மீதும் வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், இருவரும் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி 7ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தங்களை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இது தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு விமானங்களை தமிழ்நாட்டில் தரையிறக்க அனுமதி - திமுக வழக்கு

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மட்டுமே வருமான வரித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறி இருவர் மீதும் வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், இருவரும் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி 7ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தங்களை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இது தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு விமானங்களை தமிழ்நாட்டில் தரையிறக்க அனுமதி - திமுக வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.