ETV Bharat / city

21 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி!

author img

By

Published : Apr 14, 2022, 2:10 PM IST

சென்னை ஐஐடி பேராசிரியர் மது பாலாஜி அரசு பள்ளியில் பயின்று வரும் 21 மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு செய்முறை பயிற்சி அளித்தார்.

நெல்லையில் 21 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு செய்முறை பயிற்சி
நெல்லையில் 21 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு செய்முறை பயிற்சி

நெல்லை: நெல்லையில் ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் சிறப்பு செய்முறையை ஏப்.12ஆம் தேதி அளித்தார்.

இந்தப் பயிற்சியில் 13 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 21 அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டில் பெற்று வருகின்றனர்.

நெல்லையில் 21 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு செய்முறை பயிற்சி

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சி பெற்று வரும் 21 மாணவர்களையும் நேற்று (ஏப்.13) நெல்லை கொக்கிரகுளம் அரசு அறிவியல் மையத்தில் வைத்து சென்னை ஐஐடியின் பேராசிரியரும் பயிற்சியாளருமான மது பாலாஜி நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் மாணவர்களுக்கு ஐஐடி கல்வி முறை குறித்து பல்வேறு செய்முறை பயிற்சியினை கற்றுக் கொடுத்தார். குறிப்பாக நம் முன்னோர்கள் காலத்தில் சாதாரண நூலை கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டமைக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்தார்.

அப்போது மாணவர்கள் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். ஏற்கனவே இம்மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி பார்த்து அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து சமீபத்தில் இம்மாணவர்கள் 21 பேரும் ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் விமானத்தில் சென்னை சென்று அங்குள்ள ஐஐடியில் நேரடியாக பயிற்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஐடி பயிற்சியாளர் மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிப்பதும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நுழைவுத் தேர்வுக்கு தயாராக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி!

நெல்லை: நெல்லையில் ஐஐடி, ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் சிறப்பு செய்முறையை ஏப்.12ஆம் தேதி அளித்தார்.

இந்தப் பயிற்சியில் 13 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 21 அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டில் பெற்று வருகின்றனர்.

நெல்லையில் 21 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு செய்முறை பயிற்சி

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சி பெற்று வரும் 21 மாணவர்களையும் நேற்று (ஏப்.13) நெல்லை கொக்கிரகுளம் அரசு அறிவியல் மையத்தில் வைத்து சென்னை ஐஐடியின் பேராசிரியரும் பயிற்சியாளருமான மது பாலாஜி நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் மாணவர்களுக்கு ஐஐடி கல்வி முறை குறித்து பல்வேறு செய்முறை பயிற்சியினை கற்றுக் கொடுத்தார். குறிப்பாக நம் முன்னோர்கள் காலத்தில் சாதாரண நூலை கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டமைக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்தார்.

அப்போது மாணவர்கள் தங்களுக்குள் எழுந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். ஏற்கனவே இம்மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி பார்த்து அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து சமீபத்தில் இம்மாணவர்கள் 21 பேரும் ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் விமானத்தில் சென்னை சென்று அங்குள்ள ஐஐடியில் நேரடியாக பயிற்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஐடி பயிற்சியாளர் மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிப்பதும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நுழைவுத் தேர்வுக்கு தயாராக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.