ETV Bharat / city

‘தமிழுக்கு பேராபத்து திமுகதான்!’ - அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

சென்னை: தமிழுக்கு பேராபத்தை விளைவிப்பது திமுகதான் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 12, 2019, 5:17 PM IST

அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், தென் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையும் தளம் திறப்பு விழாவும், 10.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”தமிழ் மொழிக்கு பேராபத்து திமுகதான். குறிப்பாக ஸ்டாலின் குடும்பம்தான் தமிழுக்கு பேராபத்து. அதிமுக ஆட்சியில்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழில் வைத்துள்ளாரா? முதலில் நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர் நடத்தும் பள்ளியின் பெயர் தமிழில் உள்ளதா, பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், நான் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், தென் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையும் தளம் திறப்பு விழாவும், 10.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”தமிழ் மொழிக்கு பேராபத்து திமுகதான். குறிப்பாக ஸ்டாலின் குடும்பம்தான் தமிழுக்கு பேராபத்து. அதிமுக ஆட்சியில்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழில் வைத்துள்ளாரா? முதலில் நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர் நடத்தும் பள்ளியின் பெயர் தமிழில் உள்ளதா, பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், நான் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

Intro:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு


Body:சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தென் பகுதியில் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையும் தளம் திறப்பு விழா மற்றும் 10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்

தமிழ் மொழிக்கு பேராபத்தை திமுக தான் குறிப்பாக ஸ்டாலின் குடும்பம் தான் தமிழுக்கு பேராபத்து அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது

குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறுகிற அதை நான் வரவேற்கிறேன் ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழ் வைத்துள்ளாரா என்று கேள்வி எழுப்பினார்

முதலில் நாம் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
அவர் நடத்தும் பள்ளியின் பெயர் தமிழில் உள்ளதா பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார் நான் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு நல்ல தமிழ் பெயரை பரிந்துரைக்கிறேன என்று ஜெயக்குமார் கூறினார்


Conclusion:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.