ETV Bharat / city

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கீடு - மேயர் பிரியா ராஜன்

author img

By

Published : Apr 19, 2022, 2:29 PM IST

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா ராஜன் பேட்டி
மேயர் பிரியா ராஜன் பேட்டி

சென்னை: புரசைவாக்கம் சி.எஸ்.ஐ இவர்ட் (CSI Ewart) பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 80 விழுக்காடு மாணவிகளுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேயர் பிரியா ராஜன் பேட்டி

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, பாரமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: புரசைவாக்கம் சி.எஸ்.ஐ இவர்ட் (CSI Ewart) பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 80 விழுக்காடு மாணவிகளுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேயர் பிரியா ராஜன் பேட்டி

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, பாரமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.