ETV Bharat / city

கடையில் தீ விபத்து - சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம் - சென்னை ராயப்பேட்டை சுபேதார் உசேன் தெருவை சேர்ந்தவர் ஜீவா

சென்னை: இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

Fire at a two-wheeler mechanic shop in royapettah
இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
author img

By

Published : Feb 5, 2020, 11:12 AM IST

சென்னை ராயப்பேட்டை சுபேதார் உசேன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (58). இவர் அதே பகுதியில் கடந்த 30 வருடங்களாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார்.

நேற்று வழக்கம்போல் வேலை முடிந்ததும், கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மின்கசிவு காரணமாக கடையில் உள்ள பொருள்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவலளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை பகுதியிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் 14 தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.

Fire at a two-wheeler mechanic shop in royapettah
இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து

இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அதிருஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்து தொடர்பாக அண்ணாசாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.

இதையும் படிங்க:

உரக்கடையில் தீ விபத்து: 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்

சென்னை ராயப்பேட்டை சுபேதார் உசேன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (58). இவர் அதே பகுதியில் கடந்த 30 வருடங்களாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார்.

நேற்று வழக்கம்போல் வேலை முடிந்ததும், கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மின்கசிவு காரணமாக கடையில் உள்ள பொருள்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவலளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை பகுதியிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் 14 தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.

Fire at a two-wheeler mechanic shop in royapettah
இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து

இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அதிருஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்து தொடர்பாக அண்ணாசாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.

இதையும் படிங்க:

உரக்கடையில் தீ விபத்து: 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்

Intro:Body:இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து.1லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.

சென்னை ராயப்பேட்டை சுபேதார் உசேன் தெருவை சேர்ந்தவர் ஜீவா(58).இவர் அதே பகுதியில் கடந்த 30 வருடங்களாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
நேற்று வழக்கம்போல் கடையை மூடி விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 3 மணியளவில் மின்கசிவு காரணமாக கடையில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியது.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் எழும்பூர்,திருவல்லிக்கேணி,தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் 14 தீயணைப்பு வீரர்கள் சுமார் 1அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளது ஆனால் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்து தொடர்பாக அண்ணா சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.