ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 11, 2021, 5:14 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

Top 10 News @ 5 pm
Top 10 News @ 5 pm

1.காட்டுப்பகுதியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் கேமராக்களை வைத்து மடக்கிப்பிடித்து என்கவுன்ட்டர் செய்த போலீஸார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையனை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர்.

2.தமிழ்நாட்டில் நாளை 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் 1,250 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

3.பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

4.2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மூவர்

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்க்ரிஸ்ட், குய்டோ இம்பன்ஸ் ஆகிய மூவரும் 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

5.தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, பிற ஊர்களுக்கு 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

6.ஆல் அவுட் குடித்த 3 வயது குழந்தை பலி

சென்னை பம்மலில் ஆல் அவுட கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7.புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனத் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

8.9 - 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

9.மதுரை அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

மதுரை அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

10.தோனியின் வெறித்தனமான ரசிகர் கோலி செய்த செயல்... என்ன தெரியுமா?

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அதிரடியாக ஆடிய தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி கோலி போட்ட இரண்டு ட்வீட்டுக்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

1.காட்டுப்பகுதியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் கேமராக்களை வைத்து மடக்கிப்பிடித்து என்கவுன்ட்டர் செய்த போலீஸார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையனை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர்.

2.தமிழ்நாட்டில் நாளை 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் 1,250 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

3.பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

4.2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மூவர்

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்க்ரிஸ்ட், குய்டோ இம்பன்ஸ் ஆகிய மூவரும் 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

5.தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, பிற ஊர்களுக்கு 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

6.ஆல் அவுட் குடித்த 3 வயது குழந்தை பலி

சென்னை பம்மலில் ஆல் அவுட கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7.புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனத் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

8.9 - 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

9.மதுரை அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

மதுரை அருகே கோயில் நுழைவு போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

10.தோனியின் வெறித்தனமான ரசிகர் கோலி செய்த செயல்... என்ன தெரியுமா?

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அதிரடியாக ஆடிய தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி கோலி போட்ட இரண்டு ட்வீட்டுக்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.