ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 1 PM

author img

By

Published : Aug 15, 2021, 1:16 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv-bhrat-tamil
etv-bhrat-tamil

ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லி உணவகத்தில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு

டெல்லியின் துவார்காவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (ஆகஸ்ட். 15) ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட். 15) திறந்து வைத்தார்.

சுதந்திர தினம் - எப்படி இருக்கிறார் கட்டபொம்மனின் வாரிசு?

கட்டபொம்மன் வரலாறுகளும் உண்மைகளும் மறைக்கப்படக்கூடாது. அவருக்கு டெல்லி செங்கோட்டையில் கம்பீர சிலை நிறுவ வேண்டும் என்று கட்டபொம்மனின் எள்ளு பேரன் வீமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

'அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று அதிகாரிகள்' - தியாகி பரமசிவம் பிள்ளை வேதனை

பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்டியடித்தாலும்கூட, அன்றைக்கு இருந்த அதே போன்ற அதிகாரிகள்தான் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மாற வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் தற்போதுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளில் மூத்தவரான 93 வயது ரா. பரமசிவம் பிள்ளை சிறப்பு பேட்டியளித்தார்.

75ஆவது சுதந்திர தினம்: கோயம்புத்தூர் தியாகிகளின் வாரிசுகள் கருத்து!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும். நாடு வளர்ச்சி பாதைக்கு செல்ல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுதந்திர தியாகிகளின் வாரிசுகள்.

எஸ்.பி.வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

இன்று நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைகள் மூலம் சுதந்திர தாகம் விதைக்கப்பட்ட நாட்டில், சுதந்திரம் பெற்ற பிறகு, போராட்ட வரலாற்றின் சொல்லப்பட்ட, சொல்லப்படாத பல கதைகளும் கலைத்துறையான சினிமாவில் பதிவு செய்யப்பட்டன.

’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்

கேரளாவில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்டார்.

ஹைதி நிலநடுக்கம்: உயிரிழப்பு 304ஆக உயர்வு!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் நேற்று (ஆகஸ்ட். 14) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லி உணவகத்தில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு

டெல்லியின் துவார்காவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (ஆகஸ்ட். 15) ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண் - முதலமைச்சர் திறந்து வைப்பு

நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட். 15) திறந்து வைத்தார்.

சுதந்திர தினம் - எப்படி இருக்கிறார் கட்டபொம்மனின் வாரிசு?

கட்டபொம்மன் வரலாறுகளும் உண்மைகளும் மறைக்கப்படக்கூடாது. அவருக்கு டெல்லி செங்கோட்டையில் கம்பீர சிலை நிறுவ வேண்டும் என்று கட்டபொம்மனின் எள்ளு பேரன் வீமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

'அன்று ஆங்கிலேயர்கள்.. இன்று அதிகாரிகள்' - தியாகி பரமசிவம் பிள்ளை வேதனை

பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்டியடித்தாலும்கூட, அன்றைக்கு இருந்த அதே போன்ற அதிகாரிகள்தான் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மாற வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் தற்போதுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளில் மூத்தவரான 93 வயது ரா. பரமசிவம் பிள்ளை சிறப்பு பேட்டியளித்தார்.

75ஆவது சுதந்திர தினம்: கோயம்புத்தூர் தியாகிகளின் வாரிசுகள் கருத்து!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும். நாடு வளர்ச்சி பாதைக்கு செல்ல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுதந்திர தியாகிகளின் வாரிசுகள்.

எஸ்.பி.வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

இன்று நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைகள் மூலம் சுதந்திர தாகம் விதைக்கப்பட்ட நாட்டில், சுதந்திரம் பெற்ற பிறகு, போராட்ட வரலாற்றின் சொல்லப்பட்ட, சொல்லப்படாத பல கதைகளும் கலைத்துறையான சினிமாவில் பதிவு செய்யப்பட்டன.

’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்

கேரளாவில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்டார்.

ஹைதி நிலநடுக்கம்: உயிரிழப்பு 304ஆக உயர்வு!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் நேற்று (ஆகஸ்ட். 14) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.