ETV Bharat / city

வருமானவரி வழக்கு: விஷால் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான வருமானவரியை செலுத்தாத வழக்கில், நடிகர் விஷால் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jul 24, 2019, 7:23 PM IST

vishal

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி செயல்பட்டுவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது.

அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமானவரித் துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை. இது குறித்து வருமானவரித் துறை, விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி உள்ளது. அதில், இந்த வழக்கு சம்பந்தமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவை வரித் துறையில் நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி செயல்பட்டுவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது.

அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமானவரித் துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை. இது குறித்து வருமானவரித் துறை, விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து வருமானவரித் துறை சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி உள்ளது. அதில், இந்த வழக்கு சம்பந்தமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவை வரித் துறையில் நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:nullBody:வருமான வரி பாக்கி வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை.

இதுகுறித்து வருமான வரித்துறை, விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் வக்கீல் ஷீலா, எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், இந்த வழக்கு சம்பந்தமாக வருகிற 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.