ETV Bharat / city

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்!

author img

By

Published : Mar 12, 2020, 4:20 PM IST

சென்னை: திமுக பரப்பிய பொய் பரப்புரைகளால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நீக்கியதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

cm
cm

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மீதான விவாதத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தது மாணவர்களின் தரத்தைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. நாங்கள் படிக்கும் நேரத்தில் இரண்டு வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தால் அந்த வகுப்பை மீண்டும் படிக்க வைத்தனர். தற்போது எட்டாம் வகுப்புவரை கட்டாயமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதனால் அவர்களின் திறன் என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு வைக்கப்படும் என்று முன்பு அரசு அறிவித்தது உண்மைதான். ஆனால், திமுக பொய் பரப்புரைகளை செய்ததால், அதற்கு பலி ஆகிவிட வேண்டாம் என்றுதான் அந்தத் தேர்வை நீக்கினோம். தற்போது மாணவர்கள் கல்வியில், தொடர்ந்து பல சாதனைகளை புரிந்துவருகின்றனர். அவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த ஒரு பயமும் வராமல் வெற்றி பெறுவதற்கு இந்தத் தேர்வுகள் உதவியாக இருந்திருக்கும்.

கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தேர்வு முறைகளை கொண்டு வந்தோம். மத்திய அரசின் நிர்பந்தத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: அனைத்து துறைகளிலும் கொண்டுவர முயற்சி'

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மீதான விவாதத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தது மாணவர்களின் தரத்தைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. நாங்கள் படிக்கும் நேரத்தில் இரண்டு வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தால் அந்த வகுப்பை மீண்டும் படிக்க வைத்தனர். தற்போது எட்டாம் வகுப்புவரை கட்டாயமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதனால் அவர்களின் திறன் என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு வைக்கப்படும் என்று முன்பு அரசு அறிவித்தது உண்மைதான். ஆனால், திமுக பொய் பரப்புரைகளை செய்ததால், அதற்கு பலி ஆகிவிட வேண்டாம் என்றுதான் அந்தத் தேர்வை நீக்கினோம். தற்போது மாணவர்கள் கல்வியில், தொடர்ந்து பல சாதனைகளை புரிந்துவருகின்றனர். அவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த ஒரு பயமும் வராமல் வெற்றி பெறுவதற்கு இந்தத் தேர்வுகள் உதவியாக இருந்திருக்கும்.

கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தேர்வு முறைகளை கொண்டு வந்தோம். மத்திய அரசின் நிர்பந்தத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு: அனைத்து துறைகளிலும் கொண்டுவர முயற்சி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.