ETV Bharat / city

'முதுகலை மருத்துவ மாணவர்களின் தரத்தை உயர்த்த திட்டம்' - சுதா சேஷையன்

author img

By

Published : Jul 23, 2019, 1:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவம் படிக்கும், அறுவை சிகிச்சை மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காக ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன், எடின்பரோ கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் துணைவேந்தர் சுதா சேஷையன் தெரிவித்துள்ளார்.

சுதா சேஷய்யன்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் செய்தியாளர்களிடம், "எடின்பரோ ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் என்ற கல்வி நிறுவனம் 1505ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எஃப்.ஆர்.சி.எஸ்., எம்.ஆர்.சி.எஸ். என்ற தேர்வுகளை நடத்தி சர்வதேச அளவிலான சான்றிதழ்களை வழங்கிவருகிறது.

மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நடத்தும் பட்டப் படிப்புகளை இங்கு நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர். அவர்கள் இணையதளம் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் பயிற்சிகளையும், சர்வதேச தரத்திற்கான அவர்களின் தேர்வுகளையும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.

துணைவேந்தர் சுதா சேஷையன்

மேலும் தமிழ்நாட்டு மாணவர்கள், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நிறுவனத்திற்குச் சென்று படிப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இங்கு வந்து படிப்பதற்கும் தேவையான கல்வி பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தால் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரம் உயரும். ராயல் கல்லூரி ஆஃப் சர்ஜன் நிறுவனத்தில் மாணவர்கள் படித்ததை நோயாளிகளுக்குச் செயல்படுத்துவது குறித்தும் தேர்வு முறையில் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் செய்தியாளர்களிடம், "எடின்பரோ ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் என்ற கல்வி நிறுவனம் 1505ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எஃப்.ஆர்.சி.எஸ்., எம்.ஆர்.சி.எஸ். என்ற தேர்வுகளை நடத்தி சர்வதேச அளவிலான சான்றிதழ்களை வழங்கிவருகிறது.

மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நடத்தும் பட்டப் படிப்புகளை இங்கு நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர். அவர்கள் இணையதளம் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் பயிற்சிகளையும், சர்வதேச தரத்திற்கான அவர்களின் தேர்வுகளையும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.

துணைவேந்தர் சுதா சேஷையன்

மேலும் தமிழ்நாட்டு மாணவர்கள், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நிறுவனத்திற்குச் சென்று படிப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இங்கு வந்து படிப்பதற்கும் தேவையான கல்வி பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தால் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரம் உயரும். ராயல் கல்லூரி ஆஃப் சர்ஜன் நிறுவனத்தில் மாணவர்கள் படித்ததை நோயாளிகளுக்குச் செயல்படுத்துவது குறித்தும் தேர்வு முறையில் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Intro:முதுகலை மருத்துவ மாணவரின் தரத்தை உயர்த்த திட்டம்Body:சென்னை, தமிழகத்தில் முதுகலை மருத்துவம் படிக்கும் அறுவை சிகிச்சை மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காக ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் எடின்பரோ கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.



தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எடின்பரோ ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் என்ற கல்வி நிறுவனம் 1505 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் களுக்கு எப் ஆர் சி எஸ், எம் ஆர் சி எஸ் என்ற தேர்வுகளை நடத்தி சர்வதேச அளவிலான சான்றிதழ்களை வழங்கி வருகிறது.


சென்னை மாகாணத்திற்கும் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் கல்வி நிறுவனத்திற்கும் நிறைய தொடர்புகள் இருந்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அதன் உறுப்பினர்களாக உள்ளவர்களை அழைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

மேலும் தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் நடத்தும் பட்டப் படிப்புகளை இங்கு நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஆன்லைன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நடத்தப்படும் பயிற்சிகளையும், சர்வதேச தரத்திற்கான அவர்களின் தேர்வுகளையும் தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவது குறித்தும் ஆலோசிக்கின்றனர்.

மேலும் தமிழக மாணவர்கள் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் நிறுவனத்திற்கு சென்று படிப்பதற்கும், அங்கு இருக்கக் கூடிய மாணவர்கள் தமிழகம் வந்து படிப்பதற்கும் தேவையான கல்வி பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தால் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரம் உயரும். மேலும் ராயல் கல்லூரி ஆப் சர்ஜன் நிறுவனத்தில் மாணவர்கள் படித்ததை நோயாளிகளுக்கு செயல்படுத்துவது குறித்தும் தேர்வு முறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சில முறைகளை அவர்களும் பின்பற்றுகின்றனர். தமிழக மருத்துவ மாணவர்கள் அங்கு சென்று பயிற்சி பெற்று தமிழகம் திரும்பி சேவை செய்யவும் இதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.


Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.