ETV Bharat / city

’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’

author img

By

Published : Feb 26, 2020, 9:20 PM IST

சென்னை: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இந்து என். ராம், உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

dmk
dmk

இதில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “குடியுரிமைக்கே பாதுகாப்பு இல்லை என்றுதான் இதற்குக் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பும், அச்சமும் சூழ்ந்து பதற்றத்தில் உள்ளது. டெல்லி கலவரங்கள் மூலம் காவல் துறையினர் யார் கையில் உள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கே இந்நிலைமை என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசு தவறியது என்பதைவிட, சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது.

மத்திய அரசுக்குத் தெரிந்த ஒரே பதில் எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தூண்டுகின்றன என்பதுதான். மேடையில் இங்கு வெவ்வேறு இயக்கம், தேசிய, பொதுவுடமை, திராவிட தத்துவங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது, இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றத்தானே தவிர, எங்களுக்கு அரசியல் நடத்த 1000 பிரச்னைகள் உள்ளன இந்த மோடி ஆட்சியில்.

இந்தியர்களைக் காக்கக்கூடிய போர் இது. இச்சட்டத்தால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்படுவர். நாங்கள் இந்துக்களின் எதிரி போன்று கட்டமைக்க ஒரு கூட்டம் உள்ளது. அசாமில் பல லட்சம் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துப் பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

இந்துத்துவாவைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர இந்து மதத்தை அல்ல.

சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டம் பற்றிக் கேட்டால் சிடு சிடு கோபத்தோடு முதலமைச்சர் பதில் அளிக்கிறார். இச்சட்டத்தால் பாதிப்பே இல்லை என்கிறார். பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர். பாதிப்பு இல்லையென்றால் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்? எனவே, அமைச்சரவையைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’ - மு.க. ஸ்டாலின்

இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது மதமும், சாதியும். அதை யார் பயன்படுத்தினாலும் இரு பக்கமும் பதம் பார்த்துவிடும். ஆக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை கைவிட வேண்டும். இந்திய மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வை பிரதமர் மோடி தர வேண்டும்“ என்று கூறினார்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

இதில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “குடியுரிமைக்கே பாதுகாப்பு இல்லை என்றுதான் இதற்குக் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பும், அச்சமும் சூழ்ந்து பதற்றத்தில் உள்ளது. டெல்லி கலவரங்கள் மூலம் காவல் துறையினர் யார் கையில் உள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கே இந்நிலைமை என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசு தவறியது என்பதைவிட, சட்ட ஒழுங்கைக் காக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றே தோன்றுகிறது.

மத்திய அரசுக்குத் தெரிந்த ஒரே பதில் எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தூண்டுகின்றன என்பதுதான். மேடையில் இங்கு வெவ்வேறு இயக்கம், தேசிய, பொதுவுடமை, திராவிட தத்துவங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது, இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றத்தானே தவிர, எங்களுக்கு அரசியல் நடத்த 1000 பிரச்னைகள் உள்ளன இந்த மோடி ஆட்சியில்.

இந்தியர்களைக் காக்கக்கூடிய போர் இது. இச்சட்டத்தால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பாதிக்கப்படுவர். நாங்கள் இந்துக்களின் எதிரி போன்று கட்டமைக்க ஒரு கூட்டம் உள்ளது. அசாமில் பல லட்சம் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துப் பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

இந்துத்துவாவைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர இந்து மதத்தை அல்ல.

சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டம் பற்றிக் கேட்டால் சிடு சிடு கோபத்தோடு முதலமைச்சர் பதில் அளிக்கிறார். இச்சட்டத்தால் பாதிப்பே இல்லை என்கிறார். பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர். பாதிப்பு இல்லையென்றால் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்? எனவே, அமைச்சரவையைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’ - மு.க. ஸ்டாலின்

இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது மதமும், சாதியும். அதை யார் பயன்படுத்தினாலும் இரு பக்கமும் பதம் பார்த்துவிடும். ஆக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை கைவிட வேண்டும். இந்திய மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வை பிரதமர் மோடி தர வேண்டும்“ என்று கூறினார்.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.