ETV Bharat / city

தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க திமுக வழக்கு - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Feb 28, 2020, 3:19 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ, தேர்வாணையம், தமிழ்நாடு அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
high court

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன்படி 2015 நவம்பர் 8ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 62 பேர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம், அப்பல்லோ பயிற்சி மையம் ஆகிய மையங்களில் படித்தவர்களாவர்.

தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி விட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனத் தேர்வெழுதிய ஸ்வப்னா என்ற திருநங்கை 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், முறைகேடு குறித்து தன்னிச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டினார்.

இதில் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடுகள் தொடர்பாக இதுவரை ஆறு விசாரணை அறிக்கைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், அரசியல் ஆதாயத்துக்காக திமுக வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிபிஐ, தமிழ்நாடு அரசு, தேர்வாணையம் ஆகியவை இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ’தேர்வு முறைகேட்டை விசாரிக்க மாநிலக் காவல் துறைக்கு அனுமதி இல்லை’ - திமுக வாதம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன்படி 2015 நவம்பர் 8ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 62 பேர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம், அப்பல்லோ பயிற்சி மையம் ஆகிய மையங்களில் படித்தவர்களாவர்.

தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி விட்டதால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனத் தேர்வெழுதிய ஸ்வப்னா என்ற திருநங்கை 2017ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், முறைகேடு குறித்து தன்னிச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டினார்.

இதில் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.

தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடுகள் தொடர்பாக இதுவரை ஆறு விசாரணை அறிக்கைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், அரசியல் ஆதாயத்துக்காக திமுக வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிபிஐ, தமிழ்நாடு அரசு, தேர்வாணையம் ஆகியவை இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ’தேர்வு முறைகேட்டை விசாரிக்க மாநிலக் காவல் துறைக்கு அனுமதி இல்லை’ - திமுக வாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.