ETV Bharat / city

நீட் தேர்வுக்கு மூலக் காரணமே திமுகதான் - துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

author img

By

Published : Feb 7, 2022, 7:59 AM IST

நீட் தேர்விற்கு மூலக் காரணமாக இருந்தது திமுகதான், அதனை மறைப்பதற்கு அதிமுக மீது வீண்பழி சுமத்துவதா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு குறித்து அதிமுகவின் மீதும், என் மீதும் குற்றஞ்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் 'எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கிவிடுவார்கள்' என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது. திமுகவின் இந்தப் பொய்ப் பரப்புரையை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவிற்கு உண்டு.

நீட்டும் திமுகவின் காந்திச்செல்வனும்

இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2010 டிசம்பர் 27 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2010ஆம் ஆண்டு திமுக அங்கம்வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கைகளில்தான் இளநிலை - முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த எஸ். காந்திசெல்வன்.

தோற்றுவிடுவோம் எனக் கையெழுத்து போட்டதா திமுக?

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். '2010ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்துப் போட்ட திமுக, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்துவிட்டது.

பிறகு எப்படி திமுகவின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது' என்ற துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய்.

ஒருவேளை, 2011 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற ஏழை, எளிய மக்கள் விரோத நுழைவுத் தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

திமுகவின் காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட்

இதனைத் தொடர்ந்து, இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் தனது 2012 ஏப்ரல் 26 அன்றைய கடிதம் மூலம் அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுக்கும் தெரிவித்தது. இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இல்லை.

அதே சமயத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துக்கொண்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்து அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா குரல்கொடுத்தார். வேறு சில மாநிலங்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஆனால், அடுத்த ஆண்டிற்கான தேர்வினை 2013 மே 5 அன்று அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட 115 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசால் பிறப்பிக்கப்பட்ட, திமுகவைச் சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் எஸ். காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்விற்கு வழிவகுக்கும் இரண்டு அறிவிக்கைகளை ரத்துசெய்து 2013 ஜூலை 18 அன்று தீர்ப்பளித்தது.

115 தனியார் கல்லூரிகளால் தாக்கல் வழக்கில் தீர்ப்பு

நீட் தேர்வு குறித்த 2010ஆம் ஆண்டு அறிக்கைகளில்தான் திமுகவிற்குப் பங்கு இருக்கிறதே தவிர, அதனை ரத்துசெய்து 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திமுகவின் பங்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்குத் தடை வாங்கியது என்றும், அந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் துரைமுருகன் கூறுகிறார். இதில் கற்பனை வளம் இருக்கிறதே தவிர உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், 2011-12ஆம் கல்வியாண்டின்போது திமுக ஆட்சியிலேயே இல்லை. 2013ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது 115 தனியார் கல்லூரிகளால் தாக்கல்செய்யப்பட்ட மனுவின் மீதானது. துரைமுருகன் கூற்று சரி என்று வைத்துக்கொண்டாலும், திமுகவே சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதை எதிர்த்து திமுகவே வழக்குத் தொடுப்பது போல் உள்ளது.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

என்னுடைய நினைவிற்கு எட்டிய வரையில், 2010ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்த திமுக தமிழ்நாட்டில் ஆட்சி பறிபோன பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் நீட் குறித்த கருத்தைத் தெரிவித்தது.

அப்போதைய திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், மருத்துவப் படிப்பிற்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன என்றும், இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசில் இருந்துகொண்டு தகவல் வருவதாக அறிக்கை வெளியிடுவதிலிருந்தே திமுக எந்த அளவிற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற பிரச்சினையில் அக்கறையில்லாமல் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது, 2010ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டு, 2012ஆம் ஆண்டு நீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்று எழுதுகிறார். என்ன அக்கறை! என்ன உறுதிப்பாடு! இதிலிருந்து 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டிருப்பது தெளிவாகிறது.

நீட் ரத்து - அதிமுக என்றும் குரல் கொடுக்கும்

அதிமுகவைப் பொறுத்தவரையில், உளப்பூர்வமாக, மனசாட்சியுடன் ஏழை, எளிய கிராம மாணவருக்காக, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டுமென்று பாடுபட்டது.

நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினோம்.

இதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துவருகின்றனர். திமுக செய்த தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்திய அரசு அதிமுக என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும், கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள்

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்க மாட்டோம்.

'காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்டபோது, திமுக என்ன செய்துகொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை துரைமுருகன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களைத் தந்த அதிமுக

செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்குப் பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அளித்த அதிமுகவை குறைசொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. 'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்துசெய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - ஸ்டாலினிடம் ஓபிஸ் கேள்வி

சென்னை: இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு குறித்து அதிமுகவின் மீதும், என் மீதும் குற்றஞ்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் 'எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கிவிடுவார்கள்' என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது. திமுகவின் இந்தப் பொய்ப் பரப்புரையை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவிற்கு உண்டு.

நீட்டும் திமுகவின் காந்திச்செல்வனும்

இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2010 டிசம்பர் 27 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2010ஆம் ஆண்டு திமுக அங்கம்வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கைகளில்தான் இளநிலை - முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த எஸ். காந்திசெல்வன்.

தோற்றுவிடுவோம் எனக் கையெழுத்து போட்டதா திமுக?

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். '2010ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்துப் போட்ட திமுக, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்துவிட்டது.

பிறகு எப்படி திமுகவின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது' என்ற துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய்.

ஒருவேளை, 2011 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற ஏழை, எளிய மக்கள் விரோத நுழைவுத் தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

திமுகவின் காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட்

இதனைத் தொடர்ந்து, இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் தனது 2012 ஏப்ரல் 26 அன்றைய கடிதம் மூலம் அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுக்கும் தெரிவித்தது. இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இல்லை.

அதே சமயத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துக்கொண்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்து அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா குரல்கொடுத்தார். வேறு சில மாநிலங்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஆனால், அடுத்த ஆண்டிற்கான தேர்வினை 2013 மே 5 அன்று அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட 115 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசால் பிறப்பிக்கப்பட்ட, திமுகவைச் சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் எஸ். காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்விற்கு வழிவகுக்கும் இரண்டு அறிவிக்கைகளை ரத்துசெய்து 2013 ஜூலை 18 அன்று தீர்ப்பளித்தது.

115 தனியார் கல்லூரிகளால் தாக்கல் வழக்கில் தீர்ப்பு

நீட் தேர்வு குறித்த 2010ஆம் ஆண்டு அறிக்கைகளில்தான் திமுகவிற்குப் பங்கு இருக்கிறதே தவிர, அதனை ரத்துசெய்து 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திமுகவின் பங்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்குத் தடை வாங்கியது என்றும், அந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் துரைமுருகன் கூறுகிறார். இதில் கற்பனை வளம் இருக்கிறதே தவிர உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், 2011-12ஆம் கல்வியாண்டின்போது திமுக ஆட்சியிலேயே இல்லை. 2013ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது 115 தனியார் கல்லூரிகளால் தாக்கல்செய்யப்பட்ட மனுவின் மீதானது. துரைமுருகன் கூற்று சரி என்று வைத்துக்கொண்டாலும், திமுகவே சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதை எதிர்த்து திமுகவே வழக்குத் தொடுப்பது போல் உள்ளது.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

என்னுடைய நினைவிற்கு எட்டிய வரையில், 2010ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்த திமுக தமிழ்நாட்டில் ஆட்சி பறிபோன பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் நீட் குறித்த கருத்தைத் தெரிவித்தது.

அப்போதைய திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், மருத்துவப் படிப்பிற்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன என்றும், இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசில் இருந்துகொண்டு தகவல் வருவதாக அறிக்கை வெளியிடுவதிலிருந்தே திமுக எந்த அளவிற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற பிரச்சினையில் அக்கறையில்லாமல் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது, 2010ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டு, 2012ஆம் ஆண்டு நீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்று எழுதுகிறார். என்ன அக்கறை! என்ன உறுதிப்பாடு! இதிலிருந்து 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற அடிப்படையில் திமுக செயல்பட்டிருப்பது தெளிவாகிறது.

நீட் ரத்து - அதிமுக என்றும் குரல் கொடுக்கும்

அதிமுகவைப் பொறுத்தவரையில், உளப்பூர்வமாக, மனசாட்சியுடன் ஏழை, எளிய கிராம மாணவருக்காக, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டுமென்று பாடுபட்டது.

நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினோம்.

இதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துவருகின்றனர். திமுக செய்த தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்திய அரசு அதிமுக என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும், கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள்

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அதிமுக ஆட்சி நடத்தியதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்க மாட்டோம்.

'காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன என்பதை துரைமுருகன் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்டபோது, திமுக என்ன செய்துகொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை துரைமுருகன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களைத் தந்த அதிமுக

செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்குப் பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அளித்த அதிமுகவை குறைசொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. 'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்துசெய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - ஸ்டாலினிடம் ஓபிஸ் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.