ETV Bharat / city

கொடுத்த பணத்தைக் கேட்டது குற்றமா? மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளர்!

author img

By

Published : Oct 21, 2019, 10:37 AM IST

சென்னை: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளரையும் அவரது மகனையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவனை தாக்கிய திமுக வட்ட செயலாளர்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி (22) என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளர் கண்ணன் என்பவரின் மகன் கவித்ரன் (26) மருத்துவ தேவை என்று கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த பணத்தைத் திருப்பித் தராமல் கவித்ரன் வெகு நாட்களாக இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூர்த்தி, கவித்ரன் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் தந்தையும், மகனும் மூர்த்தியை சராமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மூர்த்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வட்டச் செயலாளர் கண்ணன், அவரது மகன் கவித்ரன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி (22) என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளர் கண்ணன் என்பவரின் மகன் கவித்ரன் (26) மருத்துவ தேவை என்று கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த பணத்தைத் திருப்பித் தராமல் கவித்ரன் வெகு நாட்களாக இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூர்த்தி, கவித்ரன் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் தந்தையும், மகனும் மூர்த்தியை சராமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மூர்த்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வட்டச் செயலாளர் கண்ணன், அவரது மகன் கவித்ரன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

விக்கிரவாண்டியில் சாதி வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார்?

Intro:Body:மாணவனை தாக்கிய திமுக வட்ட செயலாளர் கைது .

சென்னை தனியார் கல்லூரி மாணவரான சின்ன சேலத்தை சேர்ந்த மூர்த்தி(22) என்பவரிடம் கடந்த 2017 ம் ஆண்டு திமுக 114வது வட்ட செயலாளரின் மகன் கவித்ரன் (26) என்பவர் மருத்துவ தேவை எனக் கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இந்த பணத்தை கவித்ரன் தராமல் வெகு நாட்களாக இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மூர்த்தி கவித்ரன் வீட்டுக்கு சென்று வட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது மகன் கவித்ரனிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால், பணம் கொடுக்காமல் தந்தையும், மகனும் மூர்த்தியை சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து மூர்த்தி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்கு பதிவு செய்த போலீசார் வட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது மகனை இன்று மாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.