ETV Bharat / city

ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக வழக்கு; திக, திமுக இடையீட்டு மனு தாக்கல்!

author img

By

Published : Jul 3, 2021, 3:32 PM IST

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கில், தங்களையும் இணைத்துக் கொள்ள கோரி, திராவிடர் கழகம், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏகே ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு, திமுக இடையீட்டு மனு தாக்கல், திமுக, திக, கரு நாகராஜன் வழக்கில் திமுக இடையீட்டு மனு தாக்கல்
ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக வழக்கு

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இடையீட்டு மனுக்கள்

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளே ஒன்று... வெளியே ஒன்று...

அந்த மனுக்களில்,'தமிழ்நாட்டில் 1984ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த நுழைவுத்தேர்வு 2006ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனுதாரரின் கட்சி (பாஜக) உறுப்பினர், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராயக் குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்னும் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை.

நடவடிக்கைக்கு முன்னரே வழக்கு

அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளிக்கும்பட்சத்தில், அதன் மீது தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல், முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசன வரம்புக்கும், அதிகாரத்துக்கும் உட்பட்டுதான், தமிழ்நாடு அரசு இக்குழுவை அமைத்துள்ளது.

நீட் திணிப்பு

தமிழ்நாடு மக்களின் ஆட்சேபங்கள், சட்டப்பேரவையின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைத்துள்ளது. இந்த குழுவை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து, வரும் திங்கட்கிழமை (ஜூலை 5) விசாரணைக்கு வர உள்ளன.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக விளம்பரம் தேடும் பாஜக- உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இடையீட்டு மனுக்கள்

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளே ஒன்று... வெளியே ஒன்று...

அந்த மனுக்களில்,'தமிழ்நாட்டில் 1984ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த நுழைவுத்தேர்வு 2006ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனுதாரரின் கட்சி (பாஜக) உறுப்பினர், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராயக் குழு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்னும் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கவில்லை.

நடவடிக்கைக்கு முன்னரே வழக்கு

அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளிக்கும்பட்சத்தில், அதன் மீது தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல், முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசன வரம்புக்கும், அதிகாரத்துக்கும் உட்பட்டுதான், தமிழ்நாடு அரசு இக்குழுவை அமைத்துள்ளது.

நீட் திணிப்பு

தமிழ்நாடு மக்களின் ஆட்சேபங்கள், சட்டப்பேரவையின் விருப்பத்துக்கு முரணாக நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைத்துள்ளது. இந்த குழுவை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து, வரும் திங்கட்கிழமை (ஜூலை 5) விசாரணைக்கு வர உள்ளன.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக விளம்பரம் தேடும் பாஜக- உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.