ETV Bharat / city

யூடியூப் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jul 5, 2021, 10:41 PM IST

சென்னை: ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

pubg madhan
pubg madhan

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூடியூப் கேம் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்தனர்.

அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமிகளுடன் ஆபாசமாகப் பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்தநிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை, தர்மபுரியில் காவல்துறையினர் ஜூன் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி மதன் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. பெண்களை துன்புறுத்தியது உள்ளிட்ட எந்த குற்றத்தையும் செய்யவில்லை. புகார் அளித்தவர்களை ஏமாற்றவில்லை.

எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஏற்கனவே எனக்கு எதிரான வழக்கில் காவல்துறை என்னை காவலில் எடுத்து விசாரித்துவிட்டனர்.

நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஜூலை 5) மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. பல நபர்களிடம் மதன் மோசடி செய்துள்ளார். அதனை முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போதுமான எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்க தயாராக இருப்பதாக வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையவில்லை. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டார்.

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூடியூப் கேம் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்தனர்.

அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமிகளுடன் ஆபாசமாகப் பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்தநிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை, தர்மபுரியில் காவல்துறையினர் ஜூன் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 19ஆம் தேதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி மதன் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. பெண்களை துன்புறுத்தியது உள்ளிட்ட எந்த குற்றத்தையும் செய்யவில்லை. புகார் அளித்தவர்களை ஏமாற்றவில்லை.

எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஏற்கனவே எனக்கு எதிரான வழக்கில் காவல்துறை என்னை காவலில் எடுத்து விசாரித்துவிட்டனர்.

நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஜூலை 5) மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. பல நபர்களிடம் மதன் மோசடி செய்துள்ளார். அதனை முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போதுமான எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்க தயாராக இருப்பதாக வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையவில்லை. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.