ETV Bharat / city

மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்கள் இணைப்பு: ஏப்ரல் மாதத்தில் 217 குழாய்கள் துண்டிப்பு! - மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்கள் இணைப்பு

சென்னையில் மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த 217 கழிவுநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதுடன், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடந்த மாதம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்கள் இணைப்பு
மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்கள் இணைப்பு
author img

By

Published : May 3, 2022, 7:40 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2,071 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய்கள் உள்ள நிலையில், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவற்றில் பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை நாட்களில் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதுபோன்ற இணைப்புகளை துண்டித்து அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியின் உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டடங்களில், குடியிருப்புகளுக்கு ரூ.5,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.10,000/-மும், சிறப்பு கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.25,000/மும், வணிக வளாகங்களுக்கு ரூ.50,000/-மும், அடுக்குமாடி கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1,00,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.200,000/-ம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் இன்று வரை 15 மண்டலங்களிலும் சேர்த்து 217 இணைப்புகள் கால்வாய் உடன் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதை மாநகராட்சி அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மண்டலம் ஒன்பதில் 69 இணைப்புகளையும் மண்டல மேலில் முப்பத்தி ஏழு இணைப்புகளையும் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

இதையும் படிங்க: ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2,071 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய்கள் உள்ள நிலையில், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவற்றில் பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை நாட்களில் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதுபோன்ற இணைப்புகளை துண்டித்து அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியின் உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டடங்களில், குடியிருப்புகளுக்கு ரூ.5,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.10,000/-மும், சிறப்பு கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.25,000/மும், வணிக வளாகங்களுக்கு ரூ.50,000/-மும், அடுக்குமாடி கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1,00,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.200,000/-ம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் இன்று வரை 15 மண்டலங்களிலும் சேர்த்து 217 இணைப்புகள் கால்வாய் உடன் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதை மாநகராட்சி அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மண்டலம் ஒன்பதில் 69 இணைப்புகளையும் மண்டல மேலில் முப்பத்தி ஏழு இணைப்புகளையும் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

இதையும் படிங்க: ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.