சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்கள், கூட்டுறவுத்துறையில் உதவி தணிக்கை இயக்குநர் என 8 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 1இல் 4 பணியிடங்களுக்கு, இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23, 24 தேதிகளில் தேர்வு நடைபெறும்.
கூட்டுறவுத்துறை தணிக்கைப்பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வுத் தாளும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் வேலை