ETV Bharat / city

"தான் அதிமுகவில் இணைய முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் தான் முட்டுக்கட்டை" - ஜெ. தீபா குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 5, 2019, 8:53 PM IST

சென்னை: தான் அதிமுகவில் இணைவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் தீபா பேட்டி
சென்னையில் தீபா பேட்டி

சென்னை தியாகராய நகரில் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா இன்று செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ' அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை. தொடர்ந்து அதிமுகவில் சேர முயற்சித்தாலும் அதிமுகவில் சேர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என்றும்; ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை தங்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்காமல் எடுப்பது தண்டனைக்குரியது என்றும் குற்றம் சாட்டினர்.

சென்னையில் தீபா பேட்டி

மேலும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் எனவும்; மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறது எனவும் ஜெ. தீபா தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா இன்று செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ' அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை. தொடர்ந்து அதிமுகவில் சேர முயற்சித்தாலும் அதிமுகவில் சேர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என்றும்; ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை தங்களின் குடும்பத்தாரிடம் அனுமதி வாங்காமல் எடுப்பது தண்டனைக்குரியது என்றும் குற்றம் சாட்டினர்.

சென்னையில் தீபா பேட்டி

மேலும் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் எனவும்; மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறது எனவும் ஜெ. தீபா தெரிவித்தார்.

Intro:Body:தான் அதிமுகவில் இணைவதை ஓ பி எஸ், இ பி எஸ் தடுப்பதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் சகோதரர் தீபா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை. தொடர்ந்து அதிமுகவில் சேர முயற்சித்தாலும்
அதிமுகவில் சேர்வதற்கு இ.பிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் எனவும்,
எங்களை அழைத்து செயல்படாமல் விட்டுவிட்டு,
தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு எங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

கட்சியில் எனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என தெரிவித்தார்.

மேலும் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர்.
பொதுத்தேர்தல் வந்தாலே
வெற்றிடமும் இருக்கிறதா இல்லையா, யார் தலைவர் என்று தெரிந்துவிடும் என்றார்.

மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு அதிமுக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறது என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.