ETV Bharat / city

'விவசாயிகளின் கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது' - ப.சிதம்பரம்

author img

By

Published : Jan 4, 2021, 2:46 PM IST

விவசாயிகளின் கடும் கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்தம்பரம்

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், "திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார், உழவனின் கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாப் பற்றையும் கைவிட்டுவிட்டோம் எனக் கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை என்று. இன்று அது எவ்வளவு உண்மையாகியுள்ளது. தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதும் விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், "திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார், உழவனின் கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாப் பற்றையும் கைவிட்டுவிட்டோம் எனக் கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை என்று. இன்று அது எவ்வளவு உண்மையாகியுள்ளது. தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதும் விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் - ரிலையன்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.