ETV Bharat / city

ரூ.18.42 கோடியில் எஸ்.சி., எஸ்.டி., மாணாக்கர்களின் கட்டடம் திறப்பு - ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக கட்டடம் திறப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு
ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு
author img

By

Published : Apr 11, 2022, 2:53 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.11) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் 5 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக - பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினத்தில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகல்கேணியில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் களங்காணியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் என மொத்தம் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.11) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் 5 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக - பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினத்தில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகல்கேணியில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் களங்காணியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் என மொத்தம் 18 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.