ETV Bharat / city

7,879 பேருக்கு வேலைவாய்ப்பை தரும் தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

author img

By

Published : Oct 24, 2020, 3:31 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

cm inauguration industrial
cm inauguration industrial

சென்னை: ஒன்பது தொழில் நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டத்தின் விவரங்கள்.

வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

  1. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wheels India நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
  2. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த Salcomp நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.
  3. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase - 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.
  4. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Power Gear நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
  5. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mudhra Fine Blanc நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
  6. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Nash Industries India Limited நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.
  7. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த BBL Daido நிறுவனத்தின் Shell bearings and bushings உற்பத்தி திட்டம்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

  1. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம்.
  2. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டம்.
  3. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் Logistics Park திட்டம்.
  4. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase-2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.
  5. தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Shreevari Energy Systems நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.
  6. விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Chennai SSSS Equipments நிறுவனத்தின் Earth Breaking Equipments உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  7. திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Gas நிறுவனத்தின் City Gas distribution திட்டம்.
  8. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.
  9. கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம்.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், ஒரு குறும்படத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2019-2020ஆம் நிதி ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையான 14 கோடியே 66 இலட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவுக் காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இன்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்கள் வழங்கினார்.

சென்னை: ஒன்பது தொழில் நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டத்தின் விவரங்கள்.

வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

  1. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wheels India நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
  2. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த Salcomp நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.
  3. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase - 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.
  4. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Power Gear நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
  5. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mudhra Fine Blanc நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
  6. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Nash Industries India Limited நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.
  7. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த BBL Daido நிறுவனத்தின் Shell bearings and bushings உற்பத்தி திட்டம்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

  1. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம்.
  2. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டம்.
  3. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் Logistics Park திட்டம்.
  4. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase-2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.
  5. தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Shreevari Energy Systems நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.
  6. விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Chennai SSSS Equipments நிறுவனத்தின் Earth Breaking Equipments உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  7. திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Gas நிறுவனத்தின் City Gas distribution திட்டம்.
  8. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.
  9. கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம்.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், ஒரு குறும்படத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2019-2020ஆம் நிதி ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையான 14 கோடியே 66 இலட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவுக் காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இன்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்கள் வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.