ETV Bharat / city

கடின உழைப்புக்கு சொந்தக்காரர் மருத்துவர் திருவேங்கடம்: முதலமைச்சர் இரங்கல் செய்தி

author img

By

Published : Oct 4, 2020, 7:28 PM IST

மருத்துவர் திருவேங்கடம், தனது கடின உழைப்பாலும், திறமையாலும் மருத்துவத் துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பாகும் என தனது இரங்கல் செய்திக் குறிப்பில் முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm condolence to doctor thiruvengadam
cm condolence to doctor thiruvengadam

சென்னை: பிரபல மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் திருவேங்கடம் மறைவு தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (அக். 4) இரங்கல் செய்தி வெளியிட்டார்.

அதில், "பிரபல மருத்துவரும், மருத்துவத்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றிய மருத்துவர் கே.வி. திருவேங்கடம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், நேற்று (அக். 3) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மருத்துவர் திருவேங்கடம் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக சுமார் 31 வருடங்கள் பணியாற்றியவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மத்திய அரசு இவரது சேவையினை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த மருத்துவ பேராசிரியருக்கான டாக்டர் பி.சி ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர்.

5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவு: முதலமைச்சர் இரங்கல்!

தனது கடின உழைப்பாலும், திறமையானலும் மருத்துவத் துறையில் தனி முத்திரை பதித்தவர் மருத்துவர் திருவேங்கடம். அவரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பாகும். மருத்துவர் திருவேங்கடத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

சென்னை: பிரபல மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் திருவேங்கடம் மறைவு தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (அக். 4) இரங்கல் செய்தி வெளியிட்டார்.

அதில், "பிரபல மருத்துவரும், மருத்துவத்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றிய மருத்துவர் கே.வி. திருவேங்கடம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், நேற்று (அக். 3) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மருத்துவர் திருவேங்கடம் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக சுமார் 31 வருடங்கள் பணியாற்றியவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மத்திய அரசு இவரது சேவையினை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த மருத்துவ பேராசிரியருக்கான டாக்டர் பி.சி ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர்.

5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவு: முதலமைச்சர் இரங்கல்!

தனது கடின உழைப்பாலும், திறமையானலும் மருத்துவத் துறையில் தனி முத்திரை பதித்தவர் மருத்துவர் திருவேங்கடம். அவரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பாகும். மருத்துவர் திருவேங்கடத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.