ETV Bharat / city

திரையரங்குகளை விரைவில் திறக்க முதலமைச்சர் உறுதி - உரிமையாளர்கள் சங்கம்

author img

By

Published : Oct 20, 2020, 1:39 PM IST

Updated : Oct 20, 2020, 1:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

theatres
theatres

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, கோரிக்கை மனுவும் அளித்தனர்.

அதில், ” ஊரடங்கால் திரையரங்குகளின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாததால், தானியங்கி முறையில் உரிமங்களை புதிப்பிக்க ஆணை வழங்க வேண்டும். தினசரி 4 காட்சிகள் என்ற முறையை மாற்றி, காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை காட்சிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ” எனக் கோரப்பட்டுள்ளது.

திரையரங்குகளை விரைவில் திறக்க முதலமைச்சர் உறுதி - உரிமையாளர்கள் சங்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ’ரோகிணி’ பன்னீர்செல்வம், “ கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடியிருப்பதால் மிகுந்த வேதனையும் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அச்சங்கத்தின் நிர்வாகி அபிராமி ராமநாதன், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டனங்கள்!

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, கோரிக்கை மனுவும் அளித்தனர்.

அதில், ” ஊரடங்கால் திரையரங்குகளின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாததால், தானியங்கி முறையில் உரிமங்களை புதிப்பிக்க ஆணை வழங்க வேண்டும். தினசரி 4 காட்சிகள் என்ற முறையை மாற்றி, காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை காட்சிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ” எனக் கோரப்பட்டுள்ளது.

திரையரங்குகளை விரைவில் திறக்க முதலமைச்சர் உறுதி - உரிமையாளர்கள் சங்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ’ரோகிணி’ பன்னீர்செல்வம், “ கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடியிருப்பதால் மிகுந்த வேதனையும் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அச்சங்கத்தின் நிர்வாகி அபிராமி ராமநாதன், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டனங்கள்!

Last Updated : Oct 20, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.