ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் - இயக்குநர் கவுதமன்

author img

By

Published : Dec 9, 2019, 8:02 PM IST

தெலங்கானாவைப் போல் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளையும் சுட்டுக்கொல்ல அரசுக்கு தயக்கம் ஏன் என திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

gowthaman
gowthaman

மத்திய அரசைக் கண்டித்து 2017ஆம் ஆண்டு, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ. கவுதமன் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன்,

"சமீபகாலமாக அமைச்சர் கே. பாண்டியராஜன் தமிழ்மொழியை, தமிழ் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிற நிலையை ஏற்படுத்திவருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்குத்தான் அவர் அமைச்சராக உள்ளார். ஆனால், சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரதப் பண்பாடு, பாரத கலாசாரம் என்று சொல்வதெல்லாம் முறையல்ல, சரியல்ல.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழ் வளர்ச்சிக்காகத்தான் அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா கொண்டுவந்தார். இதில் இந்தியை திணிப்பது, அதை எதிர்த்தால் தெலுங்கு, பிரெஞ்சு மொழியை கற்றுத் தருவதெல்லாம் அண்ணாவிற்கும் தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இது புரட்சியாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.

திரைப்பட இயக்குநர் வ. கவுதமன்

தெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொன்ற காட்டுமிராண்டிகளுக்குத் தண்டனைக் கொடுத்ததில் மாறுபட்டக் கருத்தில்லை. ஆனால், அதிகாரம், பண வசதி படைத்த பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பேருந்தில் கத்தியுடன் சென்ற மாணவர்களின் கை, கால்களை உடைத்த காவல் துறை, பெண் பிள்ளைகளை கதற கதற கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்போகிறது. தெலங்கானாவில் நடந்த தண்டனையை போல் அவர்களுக்குத் தர தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?

திரைப்பட இயக்குநர் வ. கவுதமன்

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் வகையிலேயs மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதைத் தமிழ்நாடு அரசு எப்படி வேடிக்கை பார்க்கிறது எனத் தெரியவில்லை. மீதமுள்ள ஓராண்டிலாவது தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மொழிவெறுப்பு அரசியலை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அரசைக் கண்டித்து 2017ஆம் ஆண்டு, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ. கவுதமன் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன்,

"சமீபகாலமாக அமைச்சர் கே. பாண்டியராஜன் தமிழ்மொழியை, தமிழ் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிற நிலையை ஏற்படுத்திவருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்குத்தான் அவர் அமைச்சராக உள்ளார். ஆனால், சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரதப் பண்பாடு, பாரத கலாசாரம் என்று சொல்வதெல்லாம் முறையல்ல, சரியல்ல.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழ் வளர்ச்சிக்காகத்தான் அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா கொண்டுவந்தார். இதில் இந்தியை திணிப்பது, அதை எதிர்த்தால் தெலுங்கு, பிரெஞ்சு மொழியை கற்றுத் தருவதெல்லாம் அண்ணாவிற்கும் தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இது புரட்சியாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.

திரைப்பட இயக்குநர் வ. கவுதமன்

தெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொன்ற காட்டுமிராண்டிகளுக்குத் தண்டனைக் கொடுத்ததில் மாறுபட்டக் கருத்தில்லை. ஆனால், அதிகாரம், பண வசதி படைத்த பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பேருந்தில் கத்தியுடன் சென்ற மாணவர்களின் கை, கால்களை உடைத்த காவல் துறை, பெண் பிள்ளைகளை கதற கதற கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்போகிறது. தெலங்கானாவில் நடந்த தண்டனையை போல் அவர்களுக்குத் தர தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?

திரைப்பட இயக்குநர் வ. கவுதமன்

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் வகையிலேயs மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதைத் தமிழ்நாடு அரசு எப்படி வேடிக்கை பார்க்கிறது எனத் தெரியவில்லை. மீதமுள்ள ஓராண்டிலாவது தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மொழிவெறுப்பு அரசியலை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பாண்டியராஜன்

Intro:தெலுங்கானாவை போல் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அரசு தண்டனை தர வேண்டும் கவுதமன் பேட்டிBody:தெலுங்கானாவை போல் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அரசு தண்டனை தர வேண்டும் கவுதமன் பேட்டி

சென்னை கத்திப்பாராவில் மத்திய அரசை கண்டித்து கடந்த 2017ம் ஆண்டு பூட்டு போட்டதாக வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளரும் சினிமா இயக்குனருமான கவுதமன் ஆஜரானார். இதையடுத்து வழக்கை வருகிற ஜனவரி மாதம் 6ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் கவுதமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபகாலமாக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழ்மொழியை, தமிழ் வரலாற்றை சிக்கலுக்கு கேள்விக்குள்ளாக்கிற நிலையை ஏற்படுத்தி வருகிறார். தமிழ் வளர்ச்சி துறை, தொல்லியல் துறைக்கு தான் அமைச்சராக உள்ளார். ஆனால் சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரத பண்பாடு, பாரத கலாச்சாரம் என்று சொல்வது சரியல்ல. தமிழ் கலாச்சார பண்பாட்டு வளர்ச்சிக்கு தான் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்மொழியை, கலாச்சாரத்தை மறைக்கும் வேலையை இனி செய்யக்கூடாது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் வளர்ச்சிக்காக தான் உருவாக்கப்பட்டது. உலக தமிழ் மாநாட்டின் போது முதலமைச்சராக இருந்த அண்ணா உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை கொண்டு வந்தார். இதில் இந்தியை திணிப்பது. உடனே எதிர்த்தால் தெலுங்கு, பிரெஞ்சு மொழியை கற்று தருவது. யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள். அண்ணாவிற்கும் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். தமிழை தவிர வேறு மொழியையும் கற்க அனுமதிக்க கூடாது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீட வேண்டும். இது புரட்சியாக மாறவிடாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தெலுங்கானாவில் பெண் டாக்டரை வன்புணர்வு செய்து கொன்ற காட்டுமிரண்டிகளுக்கு தண்டனை கொடுத்ததில் மாறுபட்ட கருத்தும் கிடையாது. காட்டுமிராண்டிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவசரமாக என் கவுண்டர் செய்யப்பட்டு வழக்கை முடிந்தது ஏற்க முடியாது. வழக்கில் கைப்பற்ற ஆவணங்களை மக்கள் மத்தியில் காட்ட வேண்டும். அதிகாரத்தில் பண வசதி படைத்தவர்கள் செய்த பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட்டு உள்ளது. பஸ்சில் கத்தியுடன் சென்ற மாணவர்களின் கை, கால் உடைத்த போலீஸ். பெண் பிள்ளைகளை கதற கதற பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது. தெலுங்கானாவில் நடந்த தண்டனை போல் தமிழக அரசு தர முடியாதா. யார் தப்பு செய்தாலும் அதை ஒழிக்க தமிழக அரசு தயங்குவது ஏன். இதற்கு தமிழக அரசு உடனே பதிலளிக்க வேண்டும். நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. இதை தமிழக அரசு எப்படி வேடிக்கை பார்க்கிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு மத்திய அரசு சவால் விடும் வகையில் செயல்படுகிறது. ஒராண்டு உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.