ETV Bharat / city

கிறிஸ்தவர்களுக்கு திமுக என்றும் அரண்: ஸ்டாலினுடன் பேராயர்கள் சந்திப்பு!

author img

By

Published : Feb 16, 2022, 3:29 PM IST

Updated : Feb 16, 2022, 3:58 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பேராயர்கள் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை
திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 16) மு.க. ஸ்டாலினை தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதில், தென்னிந்திய திருச்சபை செயலாளர் சி. பெர்னான்டஸ் ரெத்தினராஜா, மதுரை பேராயர் ஜோசப், கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர், தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

கிறிஸ்தவர்களுக்கு என்றும் அரணாக இருப்பது திமுக

"தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று ஸ்டாலினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேராயர்கள் சார்பாக நாங்கள் சந்தித்தோம். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், இன்றைக்குச் சுபிட்சமாக, மகிழ்வோடு தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும்.

திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை
திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை

அந்த வகையிலே கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம். எனவே, எங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும், எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தோம்.

  • மேலும், ஸ்டாலினிடம் - உங்களுடைய வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.

நிச்சயமாக நடைபெறவிருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இந்தத் தமிழ்நாடு, திமுக தலைமையிலே போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியைப் பெறுவார்கள் என்ற எங்களுடைய எண்ணத்தையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறோம்.

திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை
திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை

தமிழ்நாட்டிலே சில மாதங்களாகவே, ஒருசில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக மாற்ற நினைப்பவர்களின் சிந்தனை தமிழ்நாட்டிலே எடுபடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகவே சமூக நீதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம்தான் தமிழ்நாடு. சமூக நீதியை நடைமுறைப்படுத்துகின்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை யாரும் மத ரீதியாகப் பயன்படுத்தாதீர்!

முதலமைச்சர் அவர்களுடைய கடுமையான உழைப்பிலே இன்றைக்குச் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையிலே, யாரும் தமிழ்நாட்டை மதரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது தமிழ்நாட்டிலே நடைபெறாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்திய திருச்சபை ஒட்டுமொத்த ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது. இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பேராயர்கள் தங்களது ஆதரவையும், உங்களுக்காக உழைப்போம் என்று தெரிவித்தனர்" என்றார்.

இதையும் படிங்க: மாணவி லாவண்யா மரண வழக்கு: சிபிஐ வழக்குப்பதிவு!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 16) மு.க. ஸ்டாலினை தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதில், தென்னிந்திய திருச்சபை செயலாளர் சி. பெர்னான்டஸ் ரெத்தினராஜா, மதுரை பேராயர் ஜோசப், கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர், தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

கிறிஸ்தவர்களுக்கு என்றும் அரணாக இருப்பது திமுக

"தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று ஸ்டாலினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேராயர்கள் சார்பாக நாங்கள் சந்தித்தோம். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், இன்றைக்குச் சுபிட்சமாக, மகிழ்வோடு தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும்.

திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை
திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை

அந்த வகையிலே கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம். எனவே, எங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும், எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தோம்.

  • மேலும், ஸ்டாலினிடம் - உங்களுடைய வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.

நிச்சயமாக நடைபெறவிருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இந்தத் தமிழ்நாடு, திமுக தலைமையிலே போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியைப் பெறுவார்கள் என்ற எங்களுடைய எண்ணத்தையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறோம்.

திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை
திமுகவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய திருச்சபை

தமிழ்நாட்டிலே சில மாதங்களாகவே, ஒருசில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக மாற்ற நினைப்பவர்களின் சிந்தனை தமிழ்நாட்டிலே எடுபடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகவே சமூக நீதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம்தான் தமிழ்நாடு. சமூக நீதியை நடைமுறைப்படுத்துகின்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை யாரும் மத ரீதியாகப் பயன்படுத்தாதீர்!

முதலமைச்சர் அவர்களுடைய கடுமையான உழைப்பிலே இன்றைக்குச் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையிலே, யாரும் தமிழ்நாட்டை மதரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது தமிழ்நாட்டிலே நடைபெறாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்திய திருச்சபை ஒட்டுமொத்த ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது. இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பேராயர்கள் தங்களது ஆதரவையும், உங்களுக்காக உழைப்போம் என்று தெரிவித்தனர்" என்றார்.

இதையும் படிங்க: மாணவி லாவண்யா மரண வழக்கு: சிபிஐ வழக்குப்பதிவு!

Last Updated : Feb 16, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.