ETV Bharat / city

’போண்டா’ தொண்டையில் சிக்கி பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 3, 2020, 2:10 PM IST

சென்னை: போண்டா சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
death

சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவரது மனைவி பத்மாவதி (45) நேற்று அருகிலிருந்த கடையில் போண்டா வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனே, பத்மாவதியின் தாய் அவரை அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு, பத்மாவதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்நிகழ்வு குறித்து சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

’போண்டா’ தொண்டையில் சிக்கி பெண் உயிரிழப்பு

போண்டா தொண்டையில் சிக்கி பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவரது மனைவி பத்மாவதி (45) நேற்று அருகிலிருந்த கடையில் போண்டா வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனே, பத்மாவதியின் தாய் அவரை அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு, பத்மாவதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்நிகழ்வு குறித்து சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

’போண்டா’ தொண்டையில் சிக்கி பெண் உயிரிழப்பு

போண்டா தொண்டையில் சிக்கி பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

Intro:Body:போண்டா சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேடு காமராஜர் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன்.இவரது மனைவி பத்மாவதி(45).இவரது கணவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் பத்மாவதி தனது தாயுடன் இருந்து வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த கடையில் போண்டா வாங்கி சாப்பிட்டு உள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் தொண்டையில் சிக்கி உள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பத்மாவதி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அருகிலிருந்த பத்மாவதியின் தாய் உடனே ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பத்மாவதியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கெனவே பத்மாவதி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போண்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.