ETV Bharat / city

முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா? - காவல் துறை மறுப்பு!

author img

By

Published : May 7, 2020, 5:58 PM IST

சென்னை: முதலமைச்சர் இல்லம் அருகே பணியில் இருந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று இல்லை என சென்னை காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

dismiss
dismiss

கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம். அங்கு அவரது பாதுகாப்புப் பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட அந்தப் பெண் காவலர் கடந்த 30ஆம் தேதி வரை மட்டுமே முதலமைச்சர் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பில் இருந்ததாகவும், பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா? - காவல்துறை மறுப்பு!
முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா? - காவல்துறை மறுப்பு!

மேலும், கடந்த 3ஆம் தேதி இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு 6ஆம் தேதி தொற்று உறுதியான நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இது தொடர்பாக வந்த செய்திகள் உண்மையில்லை என்றும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகளுக்கு கைதிகளை ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் மறுப்பு!

கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம். அங்கு அவரது பாதுகாப்புப் பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட அந்தப் பெண் காவலர் கடந்த 30ஆம் தேதி வரை மட்டுமே முதலமைச்சர் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பில் இருந்ததாகவும், பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா? - காவல்துறை மறுப்பு!
முதலமைச்சர் வீட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா? - காவல்துறை மறுப்பு!

மேலும், கடந்த 3ஆம் தேதி இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு 6ஆம் தேதி தொற்று உறுதியான நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இது தொடர்பாக வந்த செய்திகள் உண்மையில்லை என்றும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகளுக்கு கைதிகளை ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.