ETV Bharat / city

கழிவுநீரை அகற்ற ரோபோ எந்திரத்தை உருவாக்கிய சென்னை ஐஐடி மாணவர்கள்

author img

By

Published : May 2, 2022, 1:15 PM IST

கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சென்னை ஐஐடி மாணவர்கள் ரோபோ எந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை
ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை

சென்னை: வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றில் இறங்கி கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். கஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற இயக்கம் கையால் கழிவுகளை அகற்றும் வேலையை எந்திரமாக்க பரப்புரை செய்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இயக்கம் சென்னை ஐஐடியுடன் இணைந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கான ரோபோ எந்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான மாணவர் குழு ஓமோசெப் என்ற ரோபோ எந்திரத்தை உருவாக்கியுள்ளது.

ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை
ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை

இந்த கருவி மூலம் செப்டிக் டேங்க் கிளீனர் பகுதியிலுள்ள கெட்டியான கசடுகளை வெட்டியும், கழிவுகளை உறிஞ்சியும் எடுக்க முடியும். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ரோபோ எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நிகழ்ச்சியில், தொழிலாளர்களுக்கு ஐஐடி மாணவர்கள் விளக்கினர்.

பின்னர் இந்த எந்திரத்தை 2007ஆம் ஆண்டு கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நாகம்மாளிடம் ஐஐடி மாணவர்கள் வழங்கினர். கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும்போது இனிமேல் எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த ரோபோ எந்திரத்தை உருவாக்கியதாக ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்பட்ட எந்திரத்தை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்போவதாக நாகம்மாள் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்ட காவல்துறையினர் படடியல் - லிஸ்ட் கேட்ட உளவுத்துறை கூடுதல் டிஜிபி

சென்னை: வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றில் இறங்கி கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். கஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற இயக்கம் கையால் கழிவுகளை அகற்றும் வேலையை எந்திரமாக்க பரப்புரை செய்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இயக்கம் சென்னை ஐஐடியுடன் இணைந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கான ரோபோ எந்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான மாணவர் குழு ஓமோசெப் என்ற ரோபோ எந்திரத்தை உருவாக்கியுள்ளது.

ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை
ரோபோ எந்திரத்தை உபயோகிக்கும் முறை

இந்த கருவி மூலம் செப்டிக் டேங்க் கிளீனர் பகுதியிலுள்ள கெட்டியான கசடுகளை வெட்டியும், கழிவுகளை உறிஞ்சியும் எடுக்க முடியும். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ரோபோ எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நிகழ்ச்சியில், தொழிலாளர்களுக்கு ஐஐடி மாணவர்கள் விளக்கினர்.

பின்னர் இந்த எந்திரத்தை 2007ஆம் ஆண்டு கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நாகம்மாளிடம் ஐஐடி மாணவர்கள் வழங்கினர். கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும்போது இனிமேல் எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த ரோபோ எந்திரத்தை உருவாக்கியதாக ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்பட்ட எந்திரத்தை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்போவதாக நாகம்மாள் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்ட காவல்துறையினர் படடியல் - லிஸ்ட் கேட்ட உளவுத்துறை கூடுதல் டிஜிபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.