கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள் கும்பல் ஒன்று இளைஞர்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, காவல்துறையினர் திருநாவுக்கரசர் மற்றும் சபரிராஜன் ஆகிய இருவரையும் முக்கிய குற்றவாளிகளாக அறிவித்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்விருவரின் தாயாரும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, நான்கு வாரத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.