ETV Bharat / city

உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 60 ஆப்பிள் ஐபேட்!

author img

By

Published : Mar 21, 2020, 2:08 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளையிலுள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 60 ஆப்பிள் ஐபேட்கள் வழங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

chennai assembly cv shanmugam announcements
chennai assembly cv shanmugam announcements

அமைச்சர் வெளியிட்ட மானியக் கோரிக்கை மீதான 2020-2021 நீதி நிர்வாக அறிவிப்புகள்:

  • தமிழ்நாட்டில் உள்ள 260 நீதிமன்ற வளாகங்களில் தலா (இரண்டு வீதம்) மின்னணு பெயர் பலகைகள், இதர உபகரணங்கள் ரூபாய் 10.26 கோடி செலவில் வாங்கி நிறுவப்படும்.
  • திருச்செங்கோட்டில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய பழமைவாய்ந்த நீதிமன்ற கட்டடங்களைப் பாதுகாப்பதற்கென ரூ. 10.00 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக் கிளையில் உள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக உறையுடன் கூடிய 60 ஆப்பிள் ஐபேட் (Apple I pads) 80.93 லட்சம் செலவில் வாங்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்படக்கூடிய சாட்சி, சிறார்கள் சாட்சி ஆகியோரை விசாரிக்கும் மையம், நீதிமன்ற அறைகள் ரூபாய் 288.28 செலவில் அமைக்கப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • குற்றவழக்குத் தொடர்புத் துறையில் பணிபுரியும் 16 குற்றவழக்கு தொடர்வு உதவி இயக்குநர்களுக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஜீப் வழங்கப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • தருமபுரி மாவட்டம் அரூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூபாய் 8.60 கோடி செலவில் கட்டப்படும்.
  • ஐந்து புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  • வழக்குரைஞர் எழுத்தர்களின் சேமநல நிதி உயர்த்தி வழங்கப்படும்.
  • இளம் வழக்குரைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.

அமைச்சர் வெளியிட்ட மானியக் கோரிக்கை மீதான 2020-2021 நீதி நிர்வாக அறிவிப்புகள்:

  • தமிழ்நாட்டில் உள்ள 260 நீதிமன்ற வளாகங்களில் தலா (இரண்டு வீதம்) மின்னணு பெயர் பலகைகள், இதர உபகரணங்கள் ரூபாய் 10.26 கோடி செலவில் வாங்கி நிறுவப்படும்.
  • திருச்செங்கோட்டில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய பழமைவாய்ந்த நீதிமன்ற கட்டடங்களைப் பாதுகாப்பதற்கென ரூ. 10.00 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக் கிளையில் உள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக உறையுடன் கூடிய 60 ஆப்பிள் ஐபேட் (Apple I pads) 80.93 லட்சம் செலவில் வாங்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்படக்கூடிய சாட்சி, சிறார்கள் சாட்சி ஆகியோரை விசாரிக்கும் மையம், நீதிமன்ற அறைகள் ரூபாய் 288.28 செலவில் அமைக்கப்படும்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • குற்றவழக்குத் தொடர்புத் துறையில் பணிபுரியும் 16 குற்றவழக்கு தொடர்வு உதவி இயக்குநர்களுக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஜீப் வழங்கப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • தருமபுரி மாவட்டம் அரூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூபாய் 8.60 கோடி செலவில் கட்டப்படும்.
  • ஐந்து புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  • வழக்குரைஞர் எழுத்தர்களின் சேமநல நிதி உயர்த்தி வழங்கப்படும்.
  • இளம் வழக்குரைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.