ETV Bharat / city

காலையில் டிபன் கடை... மாலையில் செயின் பறிப்பு! - ஆடம்பரமாக வாழ பெண் செய்த பகுதி நேர வேலை - chain snatching lady arrest in chennai

சென்னை: காலை உணவகம் நடத்தி வரும் பெண், மாலை நேரங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டதை கண்டறிந்து, அப்பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

chain snatching lady arrest in chennai
சென்னை பெண் செயின் பறிப்பு
author img

By

Published : Dec 13, 2019, 5:24 PM IST

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(45), மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பேச்சியம்மாளைத் தாக்கி, அவரிடமிருந்த ஏழு சவரன் நகையைப் பறிக்க முயன்றனர். ஆனால், அதில் கையில் சிக்கிய மூன்று சவரன் நகையை மட்டும் பறித்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, அம்பத்தூர் உதவி ஆணையர் கண்ணன், உதவி ஆய்வாளர் முபாரக் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணும், ஆணும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அயனாவரத்தைச் சேர்ந்த ரேவதி(37), என்றப் பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது.

திருமணம் ஆசையால் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் இழந்தவர் புகார்!

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது, ' சம்பவம் நடந்த பிறகு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 64 கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைக்கவசம் அணிந்து கொண்டு ஒரு பெண்ணும், பின்னால் ஒரு இளைஞரும் அமர்ந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து கண்காணித்த போது அந்த வாகனத்தின் எண்ணை வைத்து பார்த்த போது அது போலியானது என தெரிய வந்தது.

சென்னை பெண் செயின் பறிப்பு

இதையடுத்து அந்த நபரின் முகத்தை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது ரேவதியும் அவரது மைத்துநர் என்பதும் தெரிய வந்தது. ரேவதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். தற்போது இந்த வாகனங்களுக்கு மாதத் தவணை கட்ட முடியாததால், ஐசிஎப் மெயின் ரோட்டுப் பகுதியில் காலையில் டிபன் கடை நடத்தி வருவதும்; அதன்பிறகு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(45), மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பேச்சியம்மாளைத் தாக்கி, அவரிடமிருந்த ஏழு சவரன் நகையைப் பறிக்க முயன்றனர். ஆனால், அதில் கையில் சிக்கிய மூன்று சவரன் நகையை மட்டும் பறித்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, அம்பத்தூர் உதவி ஆணையர் கண்ணன், உதவி ஆய்வாளர் முபாரக் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணும், ஆணும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அயனாவரத்தைச் சேர்ந்த ரேவதி(37), என்றப் பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது.

திருமணம் ஆசையால் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் இழந்தவர் புகார்!

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது, ' சம்பவம் நடந்த பிறகு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 64 கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைக்கவசம் அணிந்து கொண்டு ஒரு பெண்ணும், பின்னால் ஒரு இளைஞரும் அமர்ந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து கண்காணித்த போது அந்த வாகனத்தின் எண்ணை வைத்து பார்த்த போது அது போலியானது என தெரிய வந்தது.

சென்னை பெண் செயின் பறிப்பு

இதையடுத்து அந்த நபரின் முகத்தை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது ரேவதியும் அவரது மைத்துநர் என்பதும் தெரிய வந்தது. ரேவதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். தற்போது இந்த வாகனங்களுக்கு மாதத் தவணை கட்ட முடியாததால், ஐசிஎப் மெயின் ரோட்டுப் பகுதியில் காலையில் டிபன் கடை நடத்தி வருவதும்; அதன்பிறகு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Intro:காலையில் டிபன் கடை, மாலையில் உறவினருடன் மொபட்டில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் கில்லாடிப் பெண் கைது.
Body:காலையில் டிபன் கடை, மாலையில் உறவினருடன் மொபட்டில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் கில்லாடிப் பெண் கைது.

அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(45), மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பேச்சியம்மாளை தாக்கி அவரிடமிருந்த 7 பவுன் நகையை பறிக்க முயன்றார் அதில் 3 பவுன் நகையை மட்டும் மர்ம நபர் பறித்துச் சென்று விட்டார். இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முபாரக் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மொபட்டில் ஒரு பெண்ணும், ஆணும் சென்றது தெரியவந்தது இதையடுத்து அயனாவரத்தை சேர்ந்த ரேவதி(37), என்ற பெண்ணை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இதுகுறித்து போலீசார் கூறியதாவது : சம்பவம் நடந்த பிறகு சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 64 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹெல்மட் அணிந்து கொண்டு ஒரு பெண்ணும் பின்னால் ஒரு வாலிபரும் அமர்ந்து சென்றது தெரியவந்தது தொடர்ந்து கண்காணித்த போது அந்த மொபெட்டின் நம்பரை வைத்து பார்த்த போது அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் முகத்தை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது ரேவதியும் அவரது மைத்துனர் என்பது தெரியவந்தது. ரேவதிக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மொபட் மற்றும் கார் வாங்கியுள்ளார். போதிய வருமானம் இல்லாத காரணத்தால்
தற்போது இந்த வாகனங்களுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஐசிஎப் மெயின் ஈரோடு பகுதியில் காலையில் டிபன் கடை நடத்தி வருவதும் அதன்பிறகு தனது மொபெட்டை எடுத்துக்கொண்டு ரோந்து சென்று எந்த கடையில் பெண்கள் அதிகமாக கழுத்தில் நகை அணிந்து உள்ளார்கள் என்பதை கண்காணித்து விட்டு அதன் பின் ஆட்கள் நடமாட்டம் குறையும் நேரத்தில் தனது மைத்துனரை அழைத்துச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பறித்துக் கொண்டு வந்தவுடன் மொபட்டில் அழைத்துச் சென்று வருவது தெரியவந்தது. இதையடுத்து ரேவதியிடமிருந்து 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மைத்துனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.