ETV Bharat / city

பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

author img

By

Published : Jun 7, 2019, 1:30 PM IST

சென்னை: பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

anna

தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகின்றது.

பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பெறப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் செய்வதற்காக விண்ணப்பிக்க 45 தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்தாண்டு, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் பத்து இலக்கங்கள் கொண்ட சமவாய்ப்பு (ரேண்டம்) எண் ஜூன் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இன்று (ஜூன் 7) முதல் 12 ஆம் தேதி வரை உதவி மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது .

சென்னையில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம் என மூன்று இடங்களில் கூடுதலாக நடைபெறுகின்றன. அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகமாக இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைக்கும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூலை 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகின்றது.

பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பெறப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் செய்வதற்காக விண்ணப்பிக்க 45 தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்தாண்டு, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் பத்து இலக்கங்கள் கொண்ட சமவாய்ப்பு (ரேண்டம்) எண் ஜூன் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இன்று (ஜூன் 7) முதல் 12 ஆம் தேதி வரை உதவி மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது .

சென்னையில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம் என மூன்று இடங்களில் கூடுதலாக நடைபெறுகின்றன. அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகமாக இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைக்கும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூலை 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.



பி.இ,பி.டெக் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை,


  பி.இ., பி.டெக். பொறியியல்   படிப்பில் சேர்வதற்க்கு  விண்ணப்பங்கள் மே 2 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் பெறப்பட்டது.  அப்போது 1,33,116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 
தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் செய்வதற்காக விண்ணப்பிக்க 45 தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. 
 இந்தாண்டு, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.    ஒவ்வொரு மாணவர்களுக்கும் பத்து இலக்கங்கள் கொண்ட ரேண்டம் எண்கடந்த 3 ந் தேதி வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ( 7ம் தேதி)இன்று  முதல் 12ம் தேதி வரை அவர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள உதவி  மையங்களில்   அசல் சான்றிதழ்  சரிபார்த்து நடைபெறுகிறது .  சென்னையில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம் என 3  இடங்களில் கூடுதலாக  நடைபெறுகின்றன.
  அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகமாக இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் அனைவருக்கும் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைக்கும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17 ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூலை 3 ந் தேதி முதல் 28 ந் தேதி வரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.