ETV Bharat / city

பொறியியல் படிப்பில் உள்ள 500 இடங்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

author img

By

Published : Jul 31, 2022, 4:42 PM IST

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரையில் சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27 ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

1 லட்சத்து 56 ஆயிரத்து 214 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாக பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

மாணவர்கள் தங்களின் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து செல்ல வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரர்களுக்கு 2 ஆம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27 ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

1 லட்சத்து 56 ஆயிரத்து 214 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாக பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

மாணவர்கள் தங்களின் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து செல்ல வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரர்களுக்கு 2 ஆம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.