ETV Bharat / city

'உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு'

author img

By

Published : Jan 9, 2020, 2:11 PM IST

சென்னை: கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

press meet
press meet

மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு இதில் உடனடியாகவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிகழ்வானது தமிழ்நாடு காவல் துறையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் நேரடி யுத்தமாகவே நான் நினைக்கிறேன். கேரளாவில் நேற்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இது நடந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த அலுவலர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்.

காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்

என்.ஆர்.சி. யாருக்கும் எதிரானது அல்ல. அதை தெளிவுபடுத்தும்வகையில் தமிழ்நாடு பாஜக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கூறிவருகிறோம். இதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.

தமிழ்நாடு பாஜகத் தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருக்க வேண்டும்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்: சிசிடிவி

மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு இதில் உடனடியாகவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிகழ்வானது தமிழ்நாடு காவல் துறையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் நேரடி யுத்தமாகவே நான் நினைக்கிறேன். கேரளாவில் நேற்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இது நடந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த அலுவலர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்.

காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்

என்.ஆர்.சி. யாருக்கும் எதிரானது அல்ல. அதை தெளிவுபடுத்தும்வகையில் தமிழ்நாடு பாஜக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கூறிவருகிறோம். இதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.

தமிழ்நாடு பாஜகத் தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருக்க வேண்டும்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்: சிசிடிவி

Intro:முன்னாள் மத்திய நிதி இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் பேட்Body:சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டு வருகின்ற நபர் என்பது தெரியவருகின்றது.

தமிழ்நாடு அரசாங்கம் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் உடனடியாகவே விசாரணை நடத்த வேண்டும்.

கேரளாவில் நேற்றைய தினம் என்.ஆர்.சி க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக தான் இந்த சம்பவம் நடந்துள்ளது

இந்த சம்பவமானது தமிழக காவல்துறையின் மேல் தொடுக்கப்பட்டு இருக்கின்ற நேரடி யுத்தமாகவே நான் நினைக்கின்றேன்.

எதற்காக தமிழ்நாடு காவல் துறையைச் சார்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யப்படவேண்டும். தமிழ்நாடு காவல்துறையின் மீது கை வைத்தாள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். என தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

இதுபோன்ற பல சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் பெருகி கொண்டிருப்பது என்று தமிழக அரசாங்கம் புரிந்து வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பயங்கரவாதிகளுக்கு செவிசாய்த்து விடக்கூடாது என்பது எனது கருத்து

இந்தச் சம்பவம் கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகத்தான் நடந்தது என நான் கருதுகிறேன். தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்.

என்.ஆர்.சி யாருக்கும் எதிரானது அல்ல அதை தெளிவுபடுத்தும் வகையில் தமிழக பாஜக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கூறி வருகிறோம். இதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவதெல்லாம் தேவை இல்லாத ஒன்று என்றார்

தமிழக பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

தமிழகத்தில் நீட் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இதை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருக்க வேண்டும் என இவ்வாறு கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.