ETV Bharat / city

நீட் ஆய்வுக் குழு: பாஜகவின் வழக்கு தள்ளுபடி!

author img

By

Published : Jul 13, 2021, 3:52 PM IST

Updated : Jul 13, 2021, 7:27 PM IST

கரு நாகராஜன் வழக்கு தள்ளுபடி
கரு நாகராஜன் வழக்கு தள்ளுபடி

15:39 July 13

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டு, பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கு மட்டுமே

இந்த வழக்கு இன்று (ஜூலை 13) மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள், "இந்த குழுவை அமைத்த அரசின் அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவே அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்" எனத் தெரிவித்தனர்.

விளம்பரத்துக்காக வழக்கா...?

மனுதாரர் கரு. நாகராஜன் தரப்பில், மாநில அரசு ஏ.கே. ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா ? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என மனுதாரர் கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

அறிக்கை மூலமாகவே மாற்றங்கள் வரும்

இதையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில், "அரசியல் சாசனம் 162ஆவது பிரிவின் கீழ் சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, "இந்த ஆய்வு குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும்" எனத் தெரிவித்தார்.

குழு அமைத்ததில் முரணில்லை 

இதன் பின்னர், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை.

இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ?, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை. இந்தக் குழுவின் மூலம் ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதை பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம்.

பாஜகவின் வழக்கு தள்ளுபடி

அதேபோல, நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம், குழு நியமனம் என்பது வீண் செலவு என கூறமுடியாது. மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை" என கூறி பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

15:39 July 13

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டு, பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கு மட்டுமே

இந்த வழக்கு இன்று (ஜூலை 13) மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள், "இந்த குழுவை அமைத்த அரசின் அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவே அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்" எனத் தெரிவித்தனர்.

விளம்பரத்துக்காக வழக்கா...?

மனுதாரர் கரு. நாகராஜன் தரப்பில், மாநில அரசு ஏ.கே. ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா ? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என மனுதாரர் கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

அறிக்கை மூலமாகவே மாற்றங்கள் வரும்

இதையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில், "அரசியல் சாசனம் 162ஆவது பிரிவின் கீழ் சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, "இந்த ஆய்வு குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும்" எனத் தெரிவித்தார்.

குழு அமைத்ததில் முரணில்லை 

இதன் பின்னர், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை.

இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ?, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை. இந்தக் குழுவின் மூலம் ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதை பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம்.

பாஜகவின் வழக்கு தள்ளுபடி

அதேபோல, நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம், குழு நியமனம் என்பது வீண் செலவு என கூறமுடியாது. மக்கள் கருத்து கேட்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை" என கூறி பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

Last Updated : Jul 13, 2021, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.