ETV Bharat / city

போதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்துச்சென்றவர் கைது - போதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்து சென்ற நபர்

சென்னை: மதுபோதையில் இருசக்கர வாகனத்தை மாற்றி எடுத்துச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை
சென்னை
author img

By

Published : Dec 27, 2019, 4:40 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் புது தெருவைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் தி. நகர் சத்யா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவரது மகன் சையது முகமது அல்பவாஸ் (23). இவர் கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மண்ணடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் சையது முகமது சென்றார். மது அருந்திவிட்டு போதையிலிருந்த சையது வேறு நபரின் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.

அதன்பிறகு வெளியே நிற்கவைத்திருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என அதன் உரிமையாளர் யாசிம் நசீம் (23) அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது பாரிமுனை சிக்னல் அருகே சையது முகமது திருடிய பைக்கை பெட்ரோல் இல்லாமல் தள்ளிச் சென்றபோது யாசிம் நசீம் பிடித்துள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தைத் திருடிய சையது முகமதுவை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் புது தெருவைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் தி. நகர் சத்யா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவரது மகன் சையது முகமது அல்பவாஸ் (23). இவர் கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மண்ணடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் சையது முகமது சென்றார். மது அருந்திவிட்டு போதையிலிருந்த சையது வேறு நபரின் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.

அதன்பிறகு வெளியே நிற்கவைத்திருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என அதன் உரிமையாளர் யாசிம் நசீம் (23) அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது பாரிமுனை சிக்னல் அருகே சையது முகமது திருடிய பைக்கை பெட்ரோல் இல்லாமல் தள்ளிச் சென்றபோது யாசிம் நசீம் பிடித்துள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தைத் திருடிய சையது முகமதுவை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர்.

Intro:Body:கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது.

சென்னை நுங்கம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் நூர் முகமது.இவர் தி.நகர் சத்யா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருபவர் நூர் முகமது.இவரது மகன் சையது முகமது அல்பவாஸ்(23).இவர் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மண்ணடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் சையது முகமது வந்துள்ளார்.பின்னர் மது அருந்திவிட்டு மதுப்போதையில் இருந்த சையது வேறு நபரின் வாகனத்தை மாற்றி எடுத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெளியே நிற்க வைத்திருந்த பைக்கை காணவில்லை என இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யாசிம் நசீம்(23) அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது பாரிமுனை சிக்னல் அருகே சையது முகமது திருடிய பைக்கை பெட்ரோல் இல்லாமல் தள்ளி சென்ற போது யாசிம் நசீம் பிடித்துள்ளார்.

பின்னர் பைக்கை திருடிய சையது முகமதுவை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.பின்னர் இவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.