ETV Bharat / city

அவதூறு வழக்கு தொடர முடியாது- ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதம்

author img

By

Published : Aug 27, 2021, 6:00 PM IST

Updated : Aug 27, 2021, 7:08 PM IST

கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதற்காக நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர முடியாது என பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

bangalore-pugalendhi-challenge-expulsion-notice-issued-mhc
அவதூறு வழக்கு தொடமுடியாது- ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதம்

சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுதொடர்பான அறிக்கை, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக ஒ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே மனு

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா? அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் புகழேந்தி நடந்து கொண்டதால் நீக்கப்பட்டார். கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் நீக்கப்பட்டால் அதனை தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

பொது மக்களை அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, எங்கக் கட்சிகாரர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுகிறோம், இதில் அவதூறுக்கு என்ன இருக்கிறது என்றார்.

ஈபிஎஸ் தரப்பு வாதம்

எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், புகாரில் எந்த சாரம்சமும் இல்லை, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது விதி,
புகார்தாரர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும் கட்சி தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளது. கட்சியில் இருக்கும் ஒருவரை புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா?

புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல, கடந்த 2017ஆம் ஆண்டும் இதே போல கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வாரத்தையைதான் பயன்படுத்தும், ஆனால் அதற்காக அவதூறு வழக்கு தொடரப்படுவது முதல்முறை என தெரிவித்தார்.

புகழேந்தி தரப்பு வாதம்

புகார்தாரர் புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பதில் மனு தாக்கல் செய்கிறோம், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல்குமார், புகழேந்தி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுதொடர்பான அறிக்கை, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக ஒ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே மனு

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா? அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் புகழேந்தி நடந்து கொண்டதால் நீக்கப்பட்டார். கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் நீக்கப்பட்டால் அதனை தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

பொது மக்களை அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, எங்கக் கட்சிகாரர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுகிறோம், இதில் அவதூறுக்கு என்ன இருக்கிறது என்றார்.

ஈபிஎஸ் தரப்பு வாதம்

எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், புகாரில் எந்த சாரம்சமும் இல்லை, ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது விதி,
புகார்தாரர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும் கட்சி தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளது. கட்சியில் இருக்கும் ஒருவரை புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா?

புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல, கடந்த 2017ஆம் ஆண்டும் இதே போல கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வாரத்தையைதான் பயன்படுத்தும், ஆனால் அதற்காக அவதூறு வழக்கு தொடரப்படுவது முதல்முறை என தெரிவித்தார்.

புகழேந்தி தரப்பு வாதம்

புகார்தாரர் புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பதில் மனு தாக்கல் செய்கிறோம், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல்குமார், புகழேந்தி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Aug 27, 2021, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.