ETV Bharat / city

சிறுமியை வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிக்கு ஜாமின்: குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர்! - சென்னை சிறுமி பலாத்காரம்

சென்னை: பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்று சிறுமியின் தந்தையும் தாயும் உடைந்து அழுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bail for a rapist? Tears of a parent who lost a child
Bail for a rapist? Tears of a parent who lost a child
author img

By

Published : Nov 26, 2019, 1:46 PM IST

Updated : Nov 26, 2019, 10:13 PM IST

சென்னை திருமுல்லைவாயில் அந்தோணி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும், செந்தமிழ் செல்வி என்பவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகள் பிறந்தனர். இக்குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஜூன் 27ஆம் தேதி வீட்டில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனின் 4 வயது மகள் திடீரென காணமல் போயுள்ளார்.

அருகில் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், வீட்டைச் சுற்றி சிறுமியைத் தேடி பார்த்தபோது, அங்கிருந்த குளியலறை ஒன்றில் சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார்.

பின்னர், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் சொல்லி விடுவார் என்ற அச்சத்தில் அவரை இரக்கமின்றி கொலை செய்து, உடலை குளியலறை பக்கெட்டில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார் அந்த 60 வயது மீனாட்சி சுந்தரம்.

இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல் துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மீனாட்சி சுந்தரத்திற்கு அவரின் மனைவிக்கும் தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுமியின் பெற்றோர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறுமியின் தந்தை, ’எனக்கு தாய் தந்தை இல்லை. எனது மனைவிக்கு தாய் இல்லை. நாங்கள் இருவரும் பெறாத அன்பை எங்களுடைய மகளுக்கு வழங்கி ஆசையாய் வளர்த்து வந்தோம். ஆனால் கனவில் கூட நினைக்காத ஒன்று என் மகளுக்கு நடந்துவிட்டது. என் மகள் இறப்பிற்குப் பின், எனக்கும் எனது மனைவிக்கும் ஆறுதலாக இருந்தது காவல் துறை. கொலை செய்த நபருக்கு எப்படியாவது தண்டனை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஐந்தே மாதத்தில் அவர்களிடமுள்ள பண பலத்தால் ஜாமினில் வெளிவரவுள்ளனர். இது எங்கள் துக்கத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக உள்ளது.

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர்

என் மகள் இறந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருந்தோம். ஆனால் என் மகனை கருத்தில்கொண்டு வாழ்ந்து வந்தோம். குற்றவாளிக்கு எப்படியாவது தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு இந்த தண்டனை முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் நம்பியிருந்தோம்.

என் மகள் உயிரோடு இருந்தபோது, உறுதுணையாக இருந்த அனைவரும் தற்போது கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் எனக்கு உதவ வேண்டும். குற்றவாளிகள் தங்கள் தவறை உணரவேண்டும். எங்களது மகள், நாங்கள் வந்து அந்த கொடியவனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என நம்பியிருப்பாள். ஆனால் காப்பாற்ற முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்... அது எங்கள் தலைவிதி’ என கண்ணீர் மல்க பேசினார்.

இதையும் படிங்க: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் தள்ளுபடி!

சென்னை திருமுல்லைவாயில் அந்தோணி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும், செந்தமிழ் செல்வி என்பவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகள் பிறந்தனர். இக்குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஜூன் 27ஆம் தேதி வீட்டில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனின் 4 வயது மகள் திடீரென காணமல் போயுள்ளார்.

அருகில் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், வீட்டைச் சுற்றி சிறுமியைத் தேடி பார்த்தபோது, அங்கிருந்த குளியலறை ஒன்றில் சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார்.

பின்னர், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் சொல்லி விடுவார் என்ற அச்சத்தில் அவரை இரக்கமின்றி கொலை செய்து, உடலை குளியலறை பக்கெட்டில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார் அந்த 60 வயது மீனாட்சி சுந்தரம்.

இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல் துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மீனாட்சி சுந்தரத்திற்கு அவரின் மனைவிக்கும் தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுமியின் பெற்றோர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறுமியின் தந்தை, ’எனக்கு தாய் தந்தை இல்லை. எனது மனைவிக்கு தாய் இல்லை. நாங்கள் இருவரும் பெறாத அன்பை எங்களுடைய மகளுக்கு வழங்கி ஆசையாய் வளர்த்து வந்தோம். ஆனால் கனவில் கூட நினைக்காத ஒன்று என் மகளுக்கு நடந்துவிட்டது. என் மகள் இறப்பிற்குப் பின், எனக்கும் எனது மனைவிக்கும் ஆறுதலாக இருந்தது காவல் துறை. கொலை செய்த நபருக்கு எப்படியாவது தண்டனை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஐந்தே மாதத்தில் அவர்களிடமுள்ள பண பலத்தால் ஜாமினில் வெளிவரவுள்ளனர். இது எங்கள் துக்கத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக உள்ளது.

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர்

என் மகள் இறந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருந்தோம். ஆனால் என் மகனை கருத்தில்கொண்டு வாழ்ந்து வந்தோம். குற்றவாளிக்கு எப்படியாவது தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு இந்த தண்டனை முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் நம்பியிருந்தோம்.

என் மகள் உயிரோடு இருந்தபோது, உறுதுணையாக இருந்த அனைவரும் தற்போது கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் எனக்கு உதவ வேண்டும். குற்றவாளிகள் தங்கள் தவறை உணரவேண்டும். எங்களது மகள், நாங்கள் வந்து அந்த கொடியவனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என நம்பியிருப்பாள். ஆனால் காப்பாற்ற முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்... அது எங்கள் தலைவிதி’ என கண்ணீர் மல்க பேசினார்.

இதையும் படிங்க: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் தள்ளுபடி!

Intro:சென்னை திருமுல்லைவாயலில்   பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என 35 வயது தந்தை குமுறுவது பார்ப்போரை மட்டுமல்ல கேட்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறதுBody:சென்னை திருமுல்லைவாயலில்   பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை என 35 வயது தந்தை குமுறுவது பார்ப்போரை மட்டுமல்ல கேட்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது

சென்னை திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு  செந்தமிழ்ச்செல்விக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் இருந்தனர்  மற்ற குடும்பத்தினர் போல் மகிழ்ச்சியோடும் சந்தோசத்தில் இருந்தவர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு நிலைகுலைந்து வாழ்க்கை வெறுக்கும் அளவிற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி வீட்டில் ஆடிப் பாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனின் 4 வயது மகள் காணவில்லை என அவரது மனைவி செல்போன் மூலம் தெரிவித்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு பதறி அடித்து வீட்டுக்கு சென்றார் அப்போது எங்கு தேடியும் சிறுமி (சன்மதி) காணவில்லை பின்பு ஒரு கட்டத்தில் சிறுமியை கண்டுபிடித்து தர திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டை சுற்றி சிறுமியை தேடி பார்த்தனர் அப்போது சிறுமி (சன்மதி) அலங்காரத்துடன் அங்கிருந்த குளியலறையில் பக்கெட்டில் பிணமாக கிடந்தார் இது அவர்கள் பெற்றோர் மட்டுமல்ல அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பின்னர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர் அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர் 60 வயதான முதியவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்தது இதை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்ற முதியவர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார் பின்னர் இதனை சிறுமி வீட்டில் சொல்லி விடுவார் என்ற அச்சத்தில் சிறுமியை துடிதுடிக்க கொலை செய்து அதனை மறைக்க உடலை அவரது அவரது வீட்டில் பாத்ரூமில் பக்கெட்டில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் நாடகமாடியது தெரியவந்தது இதை அடுத்து முதியவரை  கைது செய்த காவல்துறை அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்தனர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமுல்லைவாயில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது இதனால் முதியவரை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கைகள் இழந்ததோடு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது போராட்டக்காரர்களும் பெற்றோரையும் சமாதானப்படுத்திய காவல்துறை முதியவருக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதாக சமாதானம் செய்தனர் இதனால் போராட்டங்கள் கைவிடப்பட்டது இதை அடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர் மேலும் சிறையிலிருந்த முதியவருக்கு குண்டாஸ் சட்டமூலம் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்க காவல்துறை வழிவகை செய்தது இருந்தபோதிலும் தற்போது சிறுமி உயிரிழந்து ஐந்து மாதங்கள் ஆகிய நிலையில் முதியோருக்கும் அவரது மனைவிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது இந்த தகவல் சிறுமியின் பெற்றோரை மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது தனது மகள் உயிரிழப்பிற்கு நீதியாக உரிய தண்டனை மட்டுமே என்ற நம்பிக்கையில் இருந்த கார்மேல் பெற்றோருக்கு முதியவர் ஜாமீனில் வெளியாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் தனக்கு தாய் தந்தை இல்லை என்றும் தனது மனைவிக்கு தாய் இல்லை என்றும் நாங்கள் இருவரும் பெறாத அன்பை தன் மகளுக்கு புகட்டி ஆசையாய் வளர்த்து வந்தோம் ஆனால் கனவில் கூட நினைக்காத ஒன்று என் மகளுக்கு நடந்துவிட்டது என் மகள் இறப்பிற்குப்பின் எனக்கும் எனது மனைவிக்கும் ஆறுதலாக இருந்தது காவல்துறை கொலை செய்த நபருக்கு எப்படியாவது தண்டனை கிடைத்து விடும் என்று இருந்தோம் ஆனால் ஐந்தே மாதத்தில் அவர்களிடமுள்ள பண பலத்தால் ஜாமீனில் வெளிவர உள்ளனர் இது எங்கள் தூக்கத்தை மேலும் நிரந்தரமாகும் செயலாக உள்ளது கொலையாளிக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம் தற்போது அவர்கள் இருவரும் வெளிவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என் மகள் இறந்த  பிறகு நாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருந்தோம் ஆனால் என் மகனை கருத்தில்கொண்டு வாழ்ந்து வந்தோம் , குற்றவாளிக்கு எப்படியாவது தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தோம் தற்போது அவர்கள் இருவரும் வந்துவிட்டால் என் மகனை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு நாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம் இல்லையென்றால் உயிரிழந்த என் மகள் தன்னை கொலை செய்தவன் வெளியே நிம்மதியாக இருக்கிறான் பெற்றோர் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என இறந்த என் மகளே கேட்பாள் கொலையாளி கொலை செய்ததற்கான அனைத்து சாட்சிகளும் தெள்ளத் தெளிவாக இருந்தோம் அவர்களின் ஜாமினில் வெளி வருவது இதுபோன்று சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு முன்மாதிரியாக மாறிவிடும் சட்டம் இருந்தும் அவரை தண்டிக்க முடியவில்லை . என் மகள் உயிர் இருந்தபோது உறுதுணையாக இருந்த அனைவரும் தற்போது கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் எனக்கு உதவ வேண்டும் என அவர்களது கேட்டுக்கொண்டுள்ளனர் மேலும் குற்றவாளிகள் தங்கள் தவறை உணரவேண்டும்,எங்களது மகள் நாங்கள் வந்து அந்த கொடியவனிடம் இருந்து காப்பாற்றி விடுவோம் என நம்பி இருப்பாள் ஆனால் காப்பாற்றமுடியாதவர்கள் ஆகிவிட்டோம் எங்கள் தலைவிதி என கண்ணீர் மலக பேசியுள்ளார். பெற்றோரின் இந்த கதறல் பார்ப்போரை மட்டுமல்ல கேட்போரை கண் கலங்க வைக்கிறது நிச்சயமாக தன் மகளை கொலை செய்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க வில்லை என்றால் இந்த குடும்பம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை.



இந்த தகவலை அறிந்த திருமுல்லைவாயில் அந்தோணி நகர் பகுதி மக்கள் முன்னதாகவே நாங்கள் அந்தக் கொடியவன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாக தெரிவித்தனர் .மேலும் அவர்கள் வரும்பட்சத்தில் அடித்துக்கொள்ள கூட தயங்க மாட்டோம் என்றனர். குற்றவாளிக்கும் அவருக்கு உடந்தையாய் இருந்த அவரது மனைவிக்கும்  தூக்குதண்டனை கிடைக்காவிடில் சிறுமியின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எச்சரித்துள்ளனர்.Conclusion:
Last Updated : Nov 26, 2019, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.