ETV Bharat / city

திட்டங்களுக்காக இயற்கையை அழிக்கக் கூடாது - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை - environmental destruction MHC

இயற்கையை அழித்து எந்த வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 15, 2021, 2:20 PM IST

பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்திற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி என்னும் ஏரியை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனை அகற்ற வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த வட்டாசியருக்கு வருவாய்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளதாகவும், வருவாய்துறை அலுலவர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்க கூடாது என தெரிவித்த நீதிபதிகள், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: காமராஜர் பிறந்தநாள்: மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்

பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்திற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி என்னும் ஏரியை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனை அகற்ற வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த வட்டாசியருக்கு வருவாய்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளதாகவும், வருவாய்துறை அலுலவர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்க கூடாது என தெரிவித்த நீதிபதிகள், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தினர். பின்னர், வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: காமராஜர் பிறந்தநாள்: மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.